முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒற்றுமை சிலையில் பிரதமருடன் ஐநா பொதுச் செயலாளர் சந்திப்பு

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2022      இந்தியா
Modi-2022-10-20

ஒற்றுமை சிலையில் பிரதமர் மோடியுடன் ஐநா பொதுச் செயலாளர் குட்டெரஸ் நேற்று சந்தித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார்.

தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் 2-வது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்திய பயணத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், குஜராத் சென்ற ஐ.நா.சபை பொது செயலாளர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், குஜராத் மாநில கேவாடியாவில் பிரதமர் மோடியுடன் ஐநா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சந்தித்து பேசினார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை, கேவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து