எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெங்களூரு: அம்பதி ராயுடுவை 4-ம் நிலைக்கென்றே தயார்படுத்திய பிறகு 2019 உலகக் கோப்பை அணியில் அவரைத் தேர்வு செய்யாமல் விட்டு விராட் கோலியும், ரவிசாஸ்திரியும் பெரிய தவறிழைத்து விட்டனர் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
ஓய்வு அறிவிப்பு...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார். இவரது ஐபிஎல் வாழ்க்கையில் 6-வது கோப்பையை வென்ற திருப்தியுடன் ராயுடு ஓய்வு பெற்றார். ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு தனது பயணம் நிறைவு பெறுவதாக ராயுடு பிரியாவிடை கொடுத்தார். சிஎஸ்கே ஐபிஎல் 2023 கோப்பையை வென்று ராயுடுவுக்கு ஒரு அருமையான பிரியாவிடை பரிசை அளித்தது.
சிறப்பான ஸ்டிரைக்....
அம்பதி ராயுடு 55 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1694 ரன்களை 47.05 என்ற அருமையான சராசரியை எடுத்துள்ளார். 3 சதங்களையும் 10 அரைசதங்களையும் கூட எடுத்துள்ளார் ராயுடு. அவரது ஸ்ட்ரைக் ரேட் 79.04, கொஞ்சம் கூடுதல் வாய்ப்பு கொடுத்திருந்தால் ஸ்ட்ரைக் ரேட்டை இன்னும் அதிகப்படுத்தியிருப்பார். டி20 மொத்த கரியரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 125 என்பது அவரது டவுன் ஆர்டருக்குக் குறைந்ததல்ல.
நியூசி.க்கு எதிராக....
பிப்ரவரி 3, 2019- அம்பதி ராயுடு வெலிங்டனில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 90 ரன்களை விளாசினார். அதில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்கும். அந்தப் போட்டியில் இவர் ஸ்ட்ரைக் ரேட் 80, மாறாக விஜய் சங்கரின் ஸ்ட்ரைக் ரேட் 70 தான். இவருக்கு கேதார் ஜாதவ்வே பரவாயில்லை என்பது போல் இதே போட்டியில் கேதார் ஜாதவ் தான் எடுத்த 34 ரன்களை 45 பந்துகளில் எடுத்து ஸ்ட்ரைக் ரேட்டை 75 ஆக வைத்திருந்தார். ஹர்திக் பாண்டியாதான் டாப். 22 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 45 ரன்களை அடித்து நொறுக்கினார்.
தேர்வாகவில்லை....
இந்திய அணி 252 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 217 ரன்களுக்குச் சுருண்டு தொடரையும் 4-1 என்று இந்தியா வென்றது. ஆனால் அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராயுடு 13, 18, 2 என்று சொதப்பவே அவரது இடம் கேள்விக்குறியானது. ஆனால் ராயுடுவை ஒதுக்கி விட்டு விஜய் சங்கரைத் தேர்வு செய்து விட்டு அவரை முப்பரிமாண வீரர் 3டி வீரர் என்று கூறினார் தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத். இதை சூசகமாகக் கேலி செய்த ராயுடு, நான் இந்த உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யாதது நல்லதாகப் போய் விட்டது, நான் 3டி கண்ணாடி அணிந்து கொண்டு போட்டியை பார்க்கலாமே என்று செமயாக கிண்டலடித்தார். இந்நிலையில் விராட் கோலி கேப்டனாக இருந்த போது பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே முதல் முறையாக கோலி-ரவிசாஸ்திரி கூட்டணியின் தவறு குறித்து மவுனம் கலைத்துள்ளார்:
மாபெரும் தவறு...
“2019 உலகக்கோப்பையில் அம்பதி ராயுடு ஆடியிருக்க வேண்டும். ஆம்! நிச்சயமாக! இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவரைத் தேர்வு செய்யாதது, ஒதுக்கியது மாபெரும் தவறு. நீண்ட காலமாக அவரை உலகக்கோப்பையில் 4ம் நிலைக்காக அவரை ஒருநாள் போட்டிகளில் தயார் செய்து விட்டு அவர் பெயரைப் பார்த்தால் காணவில்லை. இது மிகவும் ஆச்சரியம்தான்!” என்று ஜியோ சினிமாவில் அனில் கும்ப்ளே கருத்து கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2025
09 May 2025 -
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
09 May 2025ஸ்ரீநகர், பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
-
விமானநிலையங்கள் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் ஆய்வுக்கூட்டம்
09 May 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவரும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், நாட்டிலுள்ள விமானநிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து உள்துறை
-
மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம்: பாதுகாப்பு வளையத்துக்குள் டெல்லி - தீவிர கண்காணிப்பு
09 May 2025புதுடெல்லி, மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
திருச்சியில் ரூ.276.95 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
09 May 2025திருச்சி, திருச்சியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி
09 May 2025சென்னை, பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று (மே.10) சென்னையில் தனது தலைமையில்
-
24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
09 May 2025சென்னை, தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408.36 கோடியில் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்
-
தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
09 May 2025புதுடெல்லி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
09 May 2025புதுடில்லி, அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
புதிய போப் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
09 May 2025வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26-ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது.
-
ஐ.பி.எல். நடத்தினால் ரத்த ஆறு ஓடும்: சேப்பாக்கம் மைதானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
09 May 2025சென்னை, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தங்கம் விலை குறைவு
09 May 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (மே. 9) பவுனுக்கு ரூ. 920 குறைந்து ரூ.72,120-க்கும் விற்பனையானது.
-
எதிரிகளால் பேரிழப்பு: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்
09 May 2025பாகிஸ்தான் : உலக வங்கயிடம் இருந்து பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.
-
ஜம்மு - காஷ்மீரில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை
09 May 2025சென்னை, ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கை
-
இனிமேல் நம்முடைய பாதை சிங்கப்பாதையாக இருக்கும் திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 May 2025திருச்சி, இனிமேல் நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும். மேலும், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்று திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.
-
விமான நிலையத்துக்கு இணையாக திருச்சியில் பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டலின், விமான நிலையத்துக்கு
-
போர்ப் பதற்றம் எதிரொலி: பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
09 May 2025புதுடில்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்?
-
மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருத்தேரோட்டம் கோலாகலம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
09 May 2025மதுரை : மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவின் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 11ஆம் நாள் நிகழ்வாகத் திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர சிவா என்ற பக்த
-
இந்தியா-பாக் போர்ப்பதற்றம் எதிரொலி: ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் : பி.சி.சி.ஐ. அதிகாரபூர்வ அறிவிப்பு
09 May 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐ.பி.எல்.
-
அதிகரிக்கும் போர் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
09 May 2025புதுடெல்லி, அதிகரிக்கும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் : துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தகவல்
09 May 2025வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் தெரிவித்திருக்கிறார்.
-
இந்தியா பதிலடியில் பாக்., ராணுவ தளங்கள் சேதம்
09 May 2025புதுடில்லி, இந்தியா அளித்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள், முகாம்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
-
வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள்
09 May 2025சென்னை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்றுமுன்தினம் (மே 9) தொடங்கிய
-
தாக்குதல் முயற்சி முறியடிப்பு; பாதுகாப்பு படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
09 May 2025ஸ்ரீநகர், 'பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிக்கப்பட்டன' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.