முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      தமிழகம்
CM-4 2023-06-03

Source: provided

சென்னை : ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 5 மணியளவில் ஒடிசாவில் இருக்கும் உதயநிதி தலைமையிலான தமிழக குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள நிலை குறித்து கேட்டறிந்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையே ஒடிசாவில் கட்டாக் மருத்துவமனையில் தமிழக அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர். ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களில் 70 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ரயிலில் பயணித்ததாக அடையாளம் காணப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 70 பேரில் அதில் யாரும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து