முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது: குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: பீகார் முதல்வர் நிதிஷ்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      இந்தியா
Bihar 2023-06-05

Source: provided

பாட்னா : பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் நிதிஷ் குமார், பாலம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பீகார் மாநிலத்தின் அகுவானிகாட் மற்றும் சுல்தான்கஞ்ச்-ஐ இணைக்கும் வகையில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்துவிழும் வீடியோ ஒன்று ஞாயிற்றுக்கிழமை சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

இந்த நிலையில் பாலம் இடிந்த ஒருநாளுக்கு பின்னர் அதுகுறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர்," இடிந்து விழுந்த பாலம், ஏற்கனவே கடந்த ஆண்டும் இடிந்து விழுந்திருக்கிறது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த பாலம் சரியாக திட்டமிட்டு கட்டப்படாததால் மீண்டும் மீண்டும் இடிந்து விழுகிறது. துறை ரீதியிலான அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, மாநிலத் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அந்தப் பாலத்தின் கட்டுமானத்தில் தீவிமார குறைபாடுகளை நிபுணர்கள் கண்டறிந்ததால், பாலம் இடிந்தது திட்டமிடப்பட்டதே. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது ஏற்பட்ட இடி மின்னல் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து