எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரிலிருந்து இன்று காலை புறப்பட்டு வல்லம் ஆலக்குடியில் முதலைமுத்துவாரி ஆற்றில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைக்க உள்ளார். முன்னதாக டெல்டா மாவட்டங்களின் கடைமடை வரை முழுமையாக தண்ணீர் சென்று சேரும் வகையில் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களாக அரசு நியமித்துள்ளது. குறுவை நெல் சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேரவேண்டும் என்பதற்காக இந்த பணிகள் வேகமெடுத்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க இன்னும் 4 நாட்களே உள்ளதால் பணிகள் மும்முரமாக நடக்கிறது.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9-ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தஞ்சாவூரிலிருந்து இன்று காலை புறப்பட்டு வல்லம் ஆலக்குடியில் முதலைமுத்துவாரி ஆற்றில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து விண்ணமங்கலம் பகுதியில் தூர்வாரப்பட்டுள்ள 'சி' மற்றும் 'டி' பிரிவு வாய்க்கால்களை ஆய்வு செய்கிறார். பின்னர் அங்கிருந்து பூண்டி வழியாக திருச்சி மாவட்ட எல்லையா செங்கரையூர் பகுதிக்கு வருகை தருகிறார். அங்கு தி.மு.க.வினர் முதலமைச்சரை வரவவேற்கிறார்கள்.
இதையடுத்து திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்து புள்ளம்பாடியில் கூழையாற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் நத்தம், வெங்கடாசலபுரம் வழியாக இருதயபுரத்தில் நந்தியாற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார்.
பின்னர் சமயபுரம், கொள்ளிடம் வழியாக திருச்சியை வந்தடைகிறார். அங்கு பிற்பகல் 2.45 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். முன்னதாக விமான நிலையத்தில் தூர்வாரும் பணிகள் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளார். முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் முதல்வர் பயணம் செய்யும் வழிகளிலும், தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் பகுதிகளிலும் டிரோன்கள் பறக்க இன்று தடை விதித்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


