முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து பலத்த மழை: பூண்டி ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு : 2,500 கன அடியாக அதிகரிப்பு

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      தமிழகம்
Bundi-Lake 2023-09-25

Source: provided

திருவள்ளூர் : தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் மொத்த உயரம் 35 அடி. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 

கடந்த 25-ம் தேதி ஏரியின் நீர்மட்டம் 34 அடியை எட்டியது. மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் 1000 கனஅடியை தாண்டியது. இதைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி மாலை பூண்டி ஏரியில் இருந்து முதல்கட்டமாக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. 

நேற்று முன்தினம் அது 1684 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பூண்டி மற்றும் ஆந்திரா பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது. 

நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2600 கனஅடியாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

காலை 9 மணியளவில் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக 2500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. 

இதைத் தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயல்சாவடி, நாப்பாளையம், இடையான் சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

பூண்டி ஏரியில் மொத்தம் 3231 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி ஏரியில் 2902 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து