எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருவள்ளூர் : தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் மொத்த உயரம் 35 அடி. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
கடந்த 25-ம் தேதி ஏரியின் நீர்மட்டம் 34 அடியை எட்டியது. மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் 1000 கனஅடியை தாண்டியது. இதைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி மாலை பூண்டி ஏரியில் இருந்து முதல்கட்டமாக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் அது 1684 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பூண்டி மற்றும் ஆந்திரா பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2600 கனஅடியாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணியளவில் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக 2500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது.
இதைத் தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயல்சாவடி, நாப்பாளையம், இடையான் சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பூண்டி ஏரியில் மொத்தம் 3231 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி ஏரியில் 2902 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 3 days 4 hours ago |
முட்டை தக்காளி![]() 6 days 6 hours ago |
பிரட் மலாய்.![]() 1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 28-11-2023.
28 Nov 2023 -
முன்னாள் அமைச்சர் செல்வகணபதியை விடுதலை செய்தது சென்னை ஐகோர்ட்
28 Nov 2023சென்னை : சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ பதிந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள்
-
ரூ. 269 கோடியில் ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயில்களை உருவாக்க ஒப்பந்தம்
28 Nov 2023சென்னை, மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாமல் இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய மெட்ரோ ரயிலை உருவாக்க ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
-
அமித்ஷாவை அவதூறாக பேசியதாக வழக்கு: ராகுல் ஆஜராக உ.பி. கோர்ட் சம்மன்
28 Nov 2023சுல்தான்பூர் : அமித்ஷாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு உ.பி. கோர்ட் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
-
மருத்துவ காரணங்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது : செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
28 Nov 2023புதுடெல்லி : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
பழனியில் ரோப் கார் இயங்காது
28 Nov 2023பழனி : பழனி மலைக் கோயிலில் இன்று (நவ. 29) மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
கணவனின் ஆதார் தகவல்களை மனைவி பெற முடியாது : கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு
28 Nov 2023பெங்களூரு : கணவனின் ஆதார் தகவல்களை தனிப்பட்ட முறையில் மனைவி பெற முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
மார்க் ஆண்டனி பட விவகாரம்: மும்பை சி.பி.ஐ. அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்
28 Nov 2023மும்பை, மார்க் ஆண்டனி படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் நடிகர் விஷால் மும்பை சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.
-
குளிர்கால கூட்டத்தொடருக்கு தயாராகிறது பாராளுமன்றம்
28 Nov 2023புதுடெல்லி : குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதை முன்னிட்டு பாராளுமன்ற இரு சபைகளிலும் விவாதிக்கப்பட வேண்டிய அலுவல்கள் குறித்து ஆலோசிப்பதற்காக டிசம்பர் 2ல் அனைத்து கட்சி க
-
2039 வரை முன்பதிவான சபரிமலை படி பூஜை..!
28 Nov 2023சபரிமலை : சபரிமலையில் படி பூஜை 2039 வரையிலும் உதயாஸ்தமன பூஜை 2029 வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
2030-க்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
28 Nov 2023சென்னை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற நம்முடைய இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்று முதல்வர் மு.க.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு
28 Nov 2023சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
-
உத்தரகாண்ட்: கடந்த 17 நாட்களாக சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு
28 Nov 2023டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு எதிரொலி: இஸ்ரேல் பிரதமரின் அலுவலகத்திற்கு வந்த பணய கைதிகளின் அடுத்த பட்டியல்
28 Nov 2023டெல் அவிவ், போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு எதிரொலியாக இஸ்ரேல் பணய கைதிகளின் பட்டியல் ஒன்று அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்திற்கு வந்தடைந்து உள்ளதாக தி டைம்ஸ
-
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு: ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
28 Nov 2023புதுடெல்லி : அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் ஒருவாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது.
-
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வடிவேலு காலமானார்
28 Nov 2023சென்னை : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வடிவேல் காலமானார். அவருக்கு வயது 86.
-
ம.பி.யில் 5வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் : முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி
28 Nov 2023போபால் : மத்திய பிரதேசத்தில் 5வது முறையாக பா.ஜ.க.., ஆட்சி அமைக்கும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் கடத்தப்பட்ட சிறுமி 20 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு
28 Nov 2023திருவனந்தபுரம், கேரளாவில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சிறுமியை போலீசார் 20 மணி நேரத்துக்கு பிறகு மீட்டுள்ளனர்.
-
நாசா நிர்வாக அதிகாரி இந்தியா வருகை: இஸ்ரோ தலைவர்களை சந்திக்கிறார்
28 Nov 2023புது டெல்லி, நாசா நிர்வாக அதிகாரியான பில் நெல்சன் நேற்று இந்தியாவுக்கு வந்துள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடர்: 6 ஆஸி., வீரர்களுக்கு ஓய்வு
28 Nov 2023சிட்னி : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து 6 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
-
உத்தராகண்ட்டில் தொழிலாளர்கள் மீட்பு: உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
28 Nov 2023உத்தராகண்ட் : உத்தராகண்ட்டில் சுங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதற்கு உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
-
டிச. 24-ல் கலைஞர் நூற்றாண்டு விழா: திரைப்படத் துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
28 Nov 2023சென்னை : கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க திரைப்படத்துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனை விவகாரத்தில் தலையிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
28 Nov 2023புதுடெல்லி : மதுரை 'எய்ம்ஸ்; மருத்துவமனை விவகாரத்தில் தலையிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெரம்பலூரில் புதிய காலணி தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
28 Nov 2023சென்னை : பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
மாணவர் தற்கொலை தொடர்பான புகார்: சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம்
28 Nov 2023சென்னை, சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை தொடர்பான புகாரையடுத்து, பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.