எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம் : கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும். பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடப்படுகிறது. இது தவிர, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கனமழையால், வெள்ளம் ஏற்படுவதுடன் நகர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்க கூடும். தொடர் கனமழையால் நிலச்சரிவும் ஏற்பட கூடும். வருகிற 23-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும். நாளை 21-ம் தேதி மிக கனமழை பெய்ய கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹியில் வரும் 22-ம் தேதியன்றும், தெற்கு உள்கர்நாடக பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும். தமிழகம் மற்றும் கேரளாவில் நாளை 21-ம் தேதி வரையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


