Idhayam Matrimony

நீதிபதிகள் மகாதேவன், கோடீஸ்வர் சிங் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவியேற்றனர்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      இந்தியா
Supreme-Court-judges-2024-0

புது டெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக என். கோடீஸ்வர சிங் மற்றும் ஆர். மகாதேவன் ஆகிய இருவரும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நேற்று முறைப்படி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி அனிருத்தா போஸ், நடப்பு ஆண்டின் ஏப்ரல் 10-ம் தேதி ஓய்வு பெற்றார்.  இதே போன்று, நீதிபதி ஏ.எஸ். போபண்ணா இந்த ஆண்டின் மே 19-ம் தேதி ஓய்வு பெற்றார்.  

அவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற நிலையில், காலியாக இருந்த அந்த இரு பணியிடங்களுக்கும் நீதிபதிகளை நியமனம் செய்யும் பணியை சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் மேற்கொண்டது.

சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியத்தில் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், சூரிய காந்த் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதன்படி, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக என். கோடீஸ்வர சிங் மற்றும் ஆர். மகாதேவன் ஆகிய இருவரை நியமனம் செய்ய முடிவானது.  இது பற்றி சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் சமீபத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியான நாங்மெய்காபம் கோடீஸ்வர சிங் மற்றும் சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியான ஆர். மகாதேவன் ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக நியமிப்பதற்கு பரிந்துரை செய்திருந்தது.

இதனையேற்று அவர்கள் இருவரையும் நியமனம் செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியிட்டது. இது பற்றி மத்திய சட்ட மற்றும் நீதி துறைக்கான அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவருடைய டுவிட்டர் பதிவில் வெளியிட்ட செய்தியில், 

இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரங்களின்படி, இந்திய தலைமை நீதிபதியுடன், ஜனாதிபதி கலந்து ஆலோசனை செய்து விட்டு, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக என். கோடீஸ்வர சிங் மற்றும் ஆர். மகாதேவன் ஆகிய இருவரை நியமனம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதில், மணிப்பூரில் இருந்து முதன்முறையாக ஒருவர் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இரு நீதிபதிகளையும் பரிந்துரைக்கும் போது, பன்முகத்தன்மையின் முக்கியத்துவம் பற்றி கொலீஜியம் சுட்டி காட்டியிருந்தது.  

நீதிபதிகள் நியமனத்திற்கு, கடந்த 16-ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதன்படி, நீதிபதிகள் இருவரும் நேற்று முறைப்படி பதவியேற்று கொண்டனர்.  அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நேற்று முறைப்படி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

நீதிபதிகளின் நியமனம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் வெளியிட்ட செய்தியில், நீதிமன்ற செயல்பாடு, நிர்வாகத்தில் புத்திகூர்மை, ஒருமைப்பாடு மற்றும் மதிப்பு ஆகியவற்றிற்காக கோடீஸ்வர சிங்கை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிப்பது சிறப்பாக இருக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பார்க்கிறது.

நீதி துறையில் நல்ல அனுபவம் வாய்ந்த நீதிபதி மகாதேவனின் பணி மற்றும் ஐகோர்ட்டின் ஒரு மூத்த நீதிபதி ஆகியவற்றால், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக அவரை நியமிப்பது சிறப்பான முறையில் பொருந்தும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பார்க்கிறது என தெரிவித்து இருந்தது.

இந்த சூழலில், இரு நீதிபதிகளின் நியமனம் நேற்று நடந்தது.  இதனால், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்பட 34 நீதிபதிகள் என்ற முழு பலத்துடன் சுப்ரீம் கோர்ட்டு செயல்படும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 13 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 13 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 15 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 13 hours ago
View all comments

வாசகர் கருத்து