எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய அரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.என். ரவி நாகாலாந்து கவர்னராக கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மேகாலயா கவர்னர் பொறுப்பையும் (டிசம்பர் 18, 2019 முதல் ஜனவரி 26, 2020 வரை) சேர்த்து கவனித்து வந்தார்.
நாகாலாந்து கவர்னராக இருந்த ரவியை, தமிழக கவர்னராக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டார். 2021-ம் ஆண்டு முதல் தமிழக கவர்னராக மாற்றப்பட்டு, தற்போது வரை நீடித்து வருகிறார். கவர்னருக்கான பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
ஆர்.என்.ரவி கவர்னராக 2019, ஆகஸ்டில் பொறுப்பேற்ற நிலையில், வரும் 31-ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனால் தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு அடிபட்டது.
ஆனால், கவர்னர் ஆர்.என். ரவியின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மத்திய அரசு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


