முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் - காசா போரில் இதுவரை பத்திரிகையாளர்கள் 138 பேர் பலி

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024      உலகம்
Israel 2024-10-14

Source: provided

காசா: இஸ்ரேல்- காசா இடையிலான போரில் இதுவரை 138 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர் பெடரேஷன் தெரிவித்துள்ளது . இந்த சர்வதேச அமைப்பில் உலகம் முழுவதும் 150 நாடுகளில் 6 லட்சம் பத்திரிகையாளர்கள் உறுப்பினராக உள்ளனர்.

இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2023 அக்டோபர் மாதம் இஸ்ரேல் - காசா போர் துவங்கியது. ஓராண்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 128 பத்திரிகையாளர்கள், லெபனானை சேர்ந்த 5 பேர், இஸ்ரேலை சேர்ந்த 4 பேர், சிரியாவை சேர்ந்த ஒருவர் என 138 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இஸ்ரேல் தாக்குதலில் தான் அதிகம் பேர் பலியானதாக இந்த விவர அறிக்கை தெரிவிக்கிறது. இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பத்திரிகையாளர்கள் அமைப்பு, ஐ.நா., வரை கொண்டு சென்று இருக்கிறது. பலியான பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து