எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.
இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடருக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் பார்தீவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் குஜராத் அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பார்தீவ் படேல் 139 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி 2848 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
___________________________________________________________
மே.இ.தீவுகள் வீரர் விலகல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் கணுக்கால் காயத்தால் விலகுவதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து - மேற்கிந்திய தீவு அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் அதில் இரண்டிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
பார்படாஸில் நடத்த முதல் ஆட்டத்தில் போது ஆண்ட்ரே ரஸ்ஸல் கணுக்காலில் காயமடைந்தார். அதன்பின்னர் காயத்தால் அவதிப்பட்ட அவர் 2-வது போட்டியில் விளையாடவில்லை. தொடரை தக்கவைக்க மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும், அவருக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் சமர் ஸ்பிரிங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டியின் போது கேப்டன் ஷாய் ஹோப்புடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மைதானத்தில் இருந்து வெளியேறிய பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் இரண்டு போட்டிகளில் இருந்து விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
___________________________________________________________
முதலிடத்தை பிடித்தார் அப்ரிடி
பாகிஸ்தானில் அடுத்தாண்டு சாம்பியஸ் டிராபி நடைபெறும் நிலையில் பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஷா அஃப்ரிடி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருநாள் தொடரை வென்றதற்கு உறுதுணையாக இருந்த ஷாகின் ஷா அஃப்ரிடி 12.62 சராசரியுடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தற்போது மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் 2-வது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மஹராஜ் 3-வது இடத்திலும் உள்ளனர்.
மற்றொரு பாகிஸ்தான் வீரரான ஹாரிஸ் ராஃப் 3 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர்நாயகன் விருது வென்றதுடன் 14 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் 4-வது இடத்திலும், பும்ரா 6-வது இடத்திலும், முகமது சிராஜ் 8-வது இடத்திலும் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


