முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை : திருப்புவனம் இளைஞர் லாக்அப் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான விசாரணை அறிக்கையை வரும் 8-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் லாக் அப் மரண வழக்கில் சில சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை அலுவலர் சாட்சியங்களை முறையாக சேகரிக்கவில்லை என்று மதுரை ஐகோர்ட் கிளை  நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்த நிலையில் இளைஞர் லாக் அப் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.

இதனிடையே இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் பி.என்.எஸ்.எஸ். 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார். இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக ஐகோர்ட் மதுரைக்கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது பல்வேறு காட்டமான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

இந்த நிலையில், அஜித்குமார் கொலை வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க வேண்டும் எனவும் வழக்கில் தொடர்புடைய அனைத்து சி.சி.டி.வி .காட்சிகளையும் பாதுகாக்க வேண்டும். எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை அறிக்கையை 8-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து