முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாநிலத்தில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது

திங்கட்கிழமை, 19 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், மார்ச். - 19 - ஆந்திர மாநிலத்தில் நேற்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. கோலாபூர், நாகர்கர்னூல், மெகபூப்நகர், அடிலாபாத், காமரெட்டி உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இவற்றில் 6 தொகுதிகள் தெலுங்கானா பகுதியில் அடங்கியவை. 7 வது பகுதி ஆந்திராவின் கடற்கரை பகுதியான கோவூர் தொகுதியாகும். இந்த தொகுதிகளில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 13 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தார்கள். வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றதாக மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தனித் தெலுங்கானா கோரிக்கைக்காக 5 எம்.எல்.ஏக்கள் பதவி விலகியதால் அந்த தொகுதிகளில் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மெகபூப்நகரில் எம்.எல்.ஏவாக இருந்தவர் மரணமடைந்து விட்டார். ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக தெலுங்குதேச எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததால் கோவூரில் தேர்தல் நடந்தது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்