முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலி நாட்டில் மீண்டும் பயங்கர பூகம்பம்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

தல்கா,மார்ச்.27 - சிலி நாட்டில் மீண்டும் பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட இந்த பூகம்பத்தின் அளவு ரிக்டரில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. பசிபிக் மகா சமுத்திர பகுதியில் உள்ளது சிலி நாடு. இந்த நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டரில் 8.8 ஆக பதிவாகி இருந்தது. இதனால் ஒரு நகரமே கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். இந்தநிலையில் கடந்த ஞாயிறு அன்று மீண்டும் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.2 ஆக பதிவாகி இருந்தது என்று அமெரிக்க பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சிலியில் உள்ள தல்கா பகுதியில் இருந்து வடமேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டியிருந்தது. ஆனால் சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்று பசிபிக் சுனாமி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்