முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகர் அ.தி.மு.க மாவட்ட மகளிரணித் தலைவி மரணம் ஜெயலலிதா இரங்கல்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஏப்.- 9 - மதுரை மாநகர் அ.தி.மு.க மாவட்ட மகளிரணி தலைவி உட்பட 4 பேர் மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:- மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணித்தலைவி. ஜி.பிரமிளா காந்தி, சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் என்.சித்திரைச்சாமி, கோவை புறநகர் மாவட்டம், ஆனைமலை ஒன்றியம் பில்சின்னாம்பாளையம் ஊராட்சிக் கழகச்செயலாளரும், ஊராட்சி மன்ற துணைத்தலைவருமான பி.கே. துரைராஜ்(எ) துரையரசன், ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லானி ஒன்றியக்கழக மாவட்டப் பிரதிநிதி வி.ஜெயகுமார் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்திகேட்டு வருத்தமுற்றேன்.அவர்களை  இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன், இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்