எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜாகர்தா, ஜுன் - 18 - இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டத்தை மூன்றாவது முறையாக பெற்று சாதித்திருக்கிறார். இந்தோனேஷிய தலைநகர் ஜாகர்தாவில் இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன. இப்போட்டிகளில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பலர் பட்டத்தை வெல்ல கடுமையாக போராடினர். இந்த போட்டித் தொடரில் இந்தியா ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவில் மிகச் சிறப்பாக செயல்பட்டது. ஒலிம்பிக் போட்டித் தொடருக்கு தேர்வு பெற்றுள்ள இந்திய வீரர்கள் காஷ்யப் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் ஆரம்பம் முதல் மிகச் சிறப்பாக செயல்பட்டு அரை இறுதி போட்டியை எட்டினர். ஆனால் காஷ்யப் அரை இறுதி போட்டியில் இந்தோனேஷிய வீரரிடம் தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறினார். ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சாய்னா நேவால் அரை இறுதியில் கொரிய வீராங்கனையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 4 வது முறையாக தகுதி பெற்றார் சாய்னா. இறுதிப் போட்டியில் சாய்னா சீனாவின் ஜியூரூய் லீயை சந்தித்தார். உலகத் தரவரிசையில் 4 ம் இடத்தில் இருக்கும் லீ, ஏற்கனவே சாய்னாவுடன் மோதிய 4 போட்டிகளில் 3 இல் வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான லீ தனது அதிரடி துவக்கத்தின் மூலம் முதல் செட்டில் சாய்னாவை எளிதில் வீழ்த்தினார். இரண்டாவது கேமில் எழுச்சி கண்ட சாய்னா கடும் போராட்டத்திற்குப்பின் அந்த கேமை 22 - 20 என்ற கணக்கில் வென்றார். இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3 வது கேமை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். இந்த போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இந்த கேமில் லீ பல ரிட்டர்ன் ஷாட்களை நெட்டில் அடித்ததால் பாயிண்ட்களை இழந்தார். இதை பயன்படுத்தி மிகச் சிறப்பாக செயல்பட்ட நேவால் 21 - 19 என்ற கணக்கில் மூன்றாவது கேமை வென்று பட்டத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றினார். இதற்கு முன் 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இவர் இங்கு பட்டம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு இத் தொடரில் 2 ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்து ஓபன் போட்டியில் பட்டம் வென்ற சாய்னா நேவால், சில தினங்களுக்கு உள்ளாகவே இந்த போட்டியில் வென்றுள்ளார். இது இவர் இந்த ஆண்டில் வெல்லும் 3 வது பட்டமாகும். ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் சாய்னாவின் இந்த எழுச்சி இந்திய பேட்மிண்டன் ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி குறித்து சாய்னா கூறுகையில், இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை சீன வீராங்கனைகள் அனைவருமே கடுமையான சவாலைத் தரக்கூடியவர்கள் என்றார். மேலும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எனக்காக ஆரவார குரல் கொடுத்தது எனக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது என்றார்.
தோல்வியடைந்த லீ கூறுகையில், நான் பலமுறை வெற்றிக்கு மிக அருகில் வந்து அதை கோட்டைவிட்டேன். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஆடியதால் பல பாயிண்ட்களை இழக்க நேரிட்டது. ஆனால் நேவால் அதனை பயன்படுத்திக்கொண்டார் என்றார்.
இப்போட்டித் தொடரில் ஆடவர் பிரிவில் இந்தோனேஷியாவின் சைமன் சந்தோசோ, சீனாவின் டு பென்கியோவை 21 - 18, 13 - 21, 21 - 11 என்ற கணக்கில் வென்று பட்டத்தை கைப்பற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 20 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.