எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன் 28 - மத்திய அரசின் ஊட்டச்சத்து அடிப்படையில் மானியம் வழங்கும் திட்டத்தால் உர விலை உயர்ந்து வருவதால் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய கொள்கையை உடனடியாக அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் , நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்களை வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருக்கிறார்..மேலும் தமிழகத்திற்கு உரத்தை வழங்க பிரதமர் தலையிட்டு மத்திய ரசாயன உரத் துறைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக ஆழ்ந்த வேதனையுடனும், கவலையுடனும் இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.
ஊட்டசத்து சார்ந்த உரமானிய கொள்கையை மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ம் தேதி அறிமுகப்படுத்தியது. அது முதல் தமிழகத்துக்கு அளிக்கப்படும் உரங்களின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது.இது விவசாயிகளின் அடிப்படை தேவைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 28 லட்சம் டன் ரசாயன உரங்கள் தமிழகம் கொள்முதல் செய்கிறது.
ஊட்டசத்து சார்ந்த உரமானிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதால், ரசாயன உரங்களுக்கு உற்பத்தி செலவு அல்லது இறக்குமதி செலவு அடிப்படையில், அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரம் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ரசாயன உர நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல் சில்லரை விலையை உயர்த்தின. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பெரிதும் இன்னல்கள் ஏற்பட்டது. ஊட்டசத்துக்கு சார்ந்த உரமானிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பல்வேறு உரங்களின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்து விட்டது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அவற்றின் விலை மேலும் உயர்ந்துள்ளன. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 முதல் ஜூன் 18ந் தேதி வரை உள்ள காலகட்டத்தில் உர விலையில் ஏற்பட்டுள்ள உயர்வை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
இந்தியன் பொட்டாஷ் நிறுவனம் விற்பனை செய்யும் 50 கிலோ எடை கொண்ட டிஏபி, எம்ஓபி ஆகியவற்றின் விலை ரூ.910லிருந்து ரூ.1200 ஆகவும், ரூ.680லிருந்து ரூ.840 ஆகவும் முறையே உயர்த்தப்பட்டன.
2010 ஆம் ஆண்டுக்கு பிறகு 50 கிலோ எடை கொண்ட டிஏபி (ஐபிஎல்) விலை ரூ.486.20லிருந்து ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது (244 சதவீதம் உயர்வு). 50 கிலோ கொண்ட எம்ஓபி (ஐபிஎல்) விலை ரூ.231.66லிருந்து ரூ.840 ஆக உயர்ந்துள்ளது (363 சதவீதம் உயர்வு).
50 கிலோ எடை கொண்ட காம்ப்ளக்ஸ் உரம் 10:26:26 (இப்கோ) ரூ.374.24லிருந்து ரூ.1110ஆக உயர்ந்துள்ளது (297 சதவீத உயர்வு).
50 கிலோ எடை கொண்ட காம்ப்ளக்ஸ் 20:20:0:13 (கிரீன் ஸ்டால்) ரூ.327.40லிருந்து ரூ.858.76 ஆக உயர்ந்துள்ளது (262 சதவீத உயர்வு).
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல இத்தகைய கடும் விலை உயர்வு ஏற்பட்ட போது, மத்திய அரசின் ரசாயன உரத்துறை 201213 ஆம் ஆண்டுக்கு மானியத்தை கணிசமாக குறைத்தது.
டி.ஏ.பி. உரத்துக்கு 201112ல் டன் ஒன்றுக்கு ரூ.19,763 மானியம் அளிக்கப்பட்டது. 201213ல் இந்த மானிய தொகையை ரூ.14,350 ஆக உரத்துறை குறைத்துள்ளது. எம்.ஓ.பி. உரத்துக்கான மானியம் ரூ.16,054ல் இருந்து ரூ.14,400 ஆக மத்திய அரசு குறைந்துள்ளது. மேலும் யூரியா விலையை கூடுதலாக 10 சதவீதம் அளவுக்கு உயர்த்தவும், உயிரி உரத்திற்கு மானியம் வழங்குவது என்ற போர்வையில் மற்ற உரங்களுக்கான மானியத்தை குறைக்க .உரத்துறை திட்டமிட்டு இருப்பதாக நான் அறிகிறேன்.
.. . விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில், தமிழகத்தில் உர விற்பனை மீதான 4 சதவீத வாட் வரியை ரத்து செய்தேன். ரசாயன உரங்கள், இயற்கை உரங்கள், ச்சிக் கொல்லி போன்றவற்றின் மீதான வாட்வரி, 2011, ஜூலை 12ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு சற்று நிவாரணம் கிடைத்துள்ளது.
உரத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், உரத்தின் மீதான மானியம் குறைக்கப்பட்டதால் எழுந்துள்ள இக்கட்டான நிலையில் விவசாயிகள் போட்ட முதலீடு கிடைக்காத நிலையில் கடும் இன்னலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். விவசாயத்தில் லாபம் என்பதே பார்க்க முடியாது. விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில், தமிழகத்தில் உர விற்பனை மீதான 4 சதவீத வாட் வரியை ரத்து செய்தேன், 2011 ஜூலை 12 முதல் ரசாயன உரங்கள், இயற்கை உரங்கள், ச்சிக் கொல்லி மருந்துகள் , ஆகியவற்றின் மீதான 4 சதவீத வாட் வரி விலக்கு அமல்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது. மத்திய அரசால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சுமையை குறைக்கவும் அவர்களை பாதுகாக்கவும் நான் நடவடிக்கை எடுத்தேன். இதனால் விவசாயிகளுக்கு சற்று நிவாரணம் கிடைத்துள்ளது., மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளால் உரங்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.உரங்களுக்கான விலை நிர்ணயம், மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளை சார்ந்து இருப்பதால், ஊட்டச்சத்து சார்ந்த உரக் கொள்கை உடனடியாக திரும்ப பெறவேண்டும். ஏற்கனவே இருந்த நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்களை வழங்கும் திட்டத்தை ,நிலையான விலை நிர்ணயம் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். உழவர்களை காக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.. இல்லையென்றால் விவசாயத்தில் முற்றிலும் வருவாய் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டு, ஏராளமான நிலங்கள் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகும். போதுமான அளவுக்கு, உரிய நேரத்தில் ரசாயன உரங்களை வழங்குவது அவசியம். இதில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
விவசாயத்திற்கு உரம் இன்றியமையாதது. 2011 ஆம் ஆண்டு கரீப் பருவத்தில் 1.1 லட்சம் மெட்ரிக் டன் எம்ஓபி உர பற்றாக்குறை ஏற்பட்டது. 2011 ஆகஸ்ட், நவம்பர் சம்பா பருவத்தின் போது தமிழகத்தில் டிஏபி மற்றும் யூரியா உரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. டிஏபி 33,967 மெட்ரிக் டன்னும், யூரியா 1.37 லட்சம் மெட்ரிக் டன்னும் பற்றாக்குறை ஏற்பட்டது.
இத்தகைய இக்கட்டான நிலையிலும் என்னுடைய அரசு மேற்கொண்ட உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட திறமையான நடவடிக்கையின் காரணமாக 20112012ல் 103.85 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்போதும் ரசாயன உர சப்ளை கவலை அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. ஏப்ரல் முதல் மே வரை டிஏபியின் தேவை 48 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆனால் உர நிறுவனம் 20,603 மெட்ரிக் டன் மட்டுமே சப்ளை செய்தது. இதில் 27,397 மெட்ரிக் டன் பற்றாக்குறை ஏற்பட்டது.
2012 ஜூன் மாதம் டிஏபி உரம் 23 ஆயிரம் மெட்ரிக் டன் சப்ளை செய்யப்பட்டது. ஆனால் தேவை 30 ஆயிரம் மெட்ரிக் டன். ஏற்கனவே குறுவை சாகுபடி துவங்கி விட்டதால் தமிழகத்திற்கு தேவையான அளவுக்கு டிஏபி உரத்தை வழங்க வேண்டுமென்று நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
வேளாண் சமூகத்தை பாதுகாக்கவும், நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிபடுத்தவும் மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த சத்து அடிப்படையிலான மானிய கொள்கையை உடனடியாக திரும்ப பெற்று ஏற்கனவே இருந்த முறையை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான அளவுக்கு ரசாயன உரங்களை வழங்குவதற்கு மத்திய ரசாயன துறைக்கு உடனடியாக தாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இப்பிரச்சனையில் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு