எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.27 - தமிழ் திரை உலகின் முதல் நாயகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நஜினிகாந்த் கூறினார். திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் லிங்குசாமி, சந்திரபோஸ் தயாரிக்கும் படம் கும்கி இந்த படத்தை பிரபுசாலமன் இயக்கி உள்ளார். நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி லட்சுமிமேனன் இப்படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இசைதட்டை ரஜினிகாந்த் முன்னிலையில் கமல்ஹாசன் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.
விழாவில் இயக்குனர்கள் கெளதம் சசி, பி.வாசு, பாண்டிராஜ், சரவணன், லிங்குசாமி, கவிஞர் அறிவுமதி, யு.டி.வி தனஞ்செயன், நடிகர் சத்யராஜ் அம்மா சிவா இசையமைப்பாளர் இமான் படத்தின் நாயகன், நாயகி என பலர் கலந்துக் கொண்டனர்.
பின்னர் கமல்ஹாசன் கூறியதாவது:-
எங்கள் குடும்பத்தின் மூத்த நாயகன் நடிகர் திலகம் அவருக்கு இரண்டு புதல்வர்கள் என்றாலும் நானும் ஒரு மகன் தான் நடிகர் திலகம் இல்லாமல் இருந்தாலும் அவருடனான உறவு இன்றும் தொடர்கிறது. பிரபு மகன் விக்ரம் முதல் படியே அழுத்தமாக வைத்திருக்கிறார் என்றார்கள். அதை விட மேலே போய் மலை மீது அடி வைத்திருக்கிறார். அங்கே அருவி கொட்டுகிறது. எனக்கு சினிமா வினியோகம் பற்றி தெரியாது. ஆனால், மினிமம் கேரண்டி தெரியும். இதற்கு உதாரணம் சமீபத்தில் திரைக்கு வந்த கர்ணன் படம் உணர்த்தியது.
இந்த விழாவுக்கு நானும் ரஜினியும் வரவேண்டும் என்பது நியாயமான விருப்பம். ரஜினியும் ரொம்ப நியாயமான மனுஷன் வந்து விட்டார். எங்கள் வீட்டு செங்கல்லில் நடிகர் திலகத்தின் பெயர் உண்டு. என் வாழ்க்கையில் நான் செய்த பாக்யம், என் குரு நாதர் சிவாஜி இருக்கும் போதே சலாம் போட்டேன் அதுதான் நான் செய்த கெட்டிகாரத்தனம். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த இந்த குழந்தை நல்ல இடத்தை அடைய வேண்டும். விக்ரம் பிரபுக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் இருக்கிறது. இவ்வாறு கமல் கூறினார்.
பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
அதிகம் விழாக்களுக்கு செல்வதில்லை. காரணம், எனக்கு மைண்ட் ப்ரியா இருக்கணும். சில நேரங்களில் அப்படி இருப்பதில்லை. அதனால்தான் விழாக்களை தவிர்க்கிறேன். தம்பி பிரபு நீங்களும், கமலும் இந்த விழாவுக்கு வரவேண்டும் என்றார். நான் உடல் நிலை குறித்து யோசித்தேன். பிறகு போய் தீரவேண்டும் என்று மனசு கூறியது காரணம், தமிழ் திரை உலகின் முதல் நாயகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர் வீட்டு விழா வந்துவிட்டேன். நான் சிங்கப்பூரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது கமல் சிங்கப்பூர் வந்திருந்தார். என்னை பார்க்க வேண்டும் என்று கூறியபோது மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை அப்போது சிங்கப்பூர் வந்து உங்களை பார்க்காமல் போவது கஷ்டமா இருக்கு என்றார். நான் சென்னை வந்ததும் பார்க்கிறேன். என்றேன். உங்கள் பிரார்த்தனையால் நலமடைந்தது. அந்த நிலையில் நான் இருந்த போது எண்ணி பார்க்கவே வெட்கமா இருக்கு, கூச்சமா இருக்கு நீங்க என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி கடன் பட்டுயிருக்கிறேன். மூளை மட்டும் வேலை செய்தால் போதாது, உடம்பும் வேலை செய்யனும், அப்போது தான் ஆரோக்கியமாக இருக்கும்.
நண்பர் கமல்ஹாசன் ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான பேர்ரி ஹாஸ் போன் என்பவருடன் இணைந்து படம் பண்ணுகிறார் என்கிற செய்தியை கேட்கும் போது தமிழ் சினிமாவுக்கு மட்டுமே பெருமை இல்லை இந்திய சினிமாவுக்கேபெருமை. இப்படத்தின் நாயகன் விக்ரம் பிரபு நீ பயப்படுவதுதெரிகிறது. பயப்படு ஆனால் கவலைபடாதே. உங்க தாத்தா பெரிய சாதனை படைத்தவர். அவர் பெயரை காப்பாற்றுவது பெரிய விஷயம். இங்கே ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன் வருஷத்திற்கு ஒரு படம் என்று முடிவு செய்யாதீர்கள். ஒரு படம் முடிஞ்சு அடுத்த படம். பண்ணும் போது டென்ஷன் இருக்கும் அதனால் ரெண்டு மூணு படங்கள் கைவசம் வச்சுகிங்க அதுதான் இண்டஸ்ட்ரீக்கும் நல்லது. நிச்சயம் கும்கி பேசப்படும் படமாக அமையும். இதில் உழைத்த அனைவரும் பேசப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் பிரபு மகன் விக்ரம் பிரபு முதன் முறையாக நாயகனாக நடித்திருக்கிறார் இந்த செய்தி அறிந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தொலைப்பேசி மூலம் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவலை பிரபு நிருபர்களிடம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.