முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பணியாளர்களுக்கு இணையான ஓய்வூதியம் ஆவின் ஊழியர்கள் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 28 - அரசுப் பணியாளர்களுக்கு இணையான ஓய்வூதியம், ஆவின் பணியாளர்களுக்கும் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆவின் பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. கோபிநாத் வெளியிட்ட செய்தி வருமாறு:- அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்துக்கு இணையாக ஆவின் ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கவேண்டும். ஓய்வு பெற்ற ஆவின் பணியாளர்களுக்கு, தினமும் அரை லிட்டர் பால் இலவசமாக அவர்களின் வாழ்நாள் முழுவதும் வழங்க வேண்டும். ஆவின் நிறுவனத்தில் இளநிலை மேலாளர்களாகப் பணிபுரியும் டிப்ளமோ பொறியியல் பணியாளர்களுக்கு, ஒரு நபர் குழுவின் பரிந்துரையின்படி, புதிய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியம் நிர்ணயம் செய்து, நிலுவைத் தொகையுடன் வழங்கவேண்டும். டிப்ளமோ தகுதியுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இளநிலை மேலாளராக பணிபுரியும் 46 பேருக்கும் துணை மேலாளராக பதவி உயர்வு வழங்கவேண்டும். தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தை ஆவின் பணியாளர்களுக்கும் வழங்கவேண்டும். ஆவின் ஊழியர்களின் நீnullண்ட நாள் கோரிக்கையான இவற்றை உடனடியாக நிறைவேற்றவேண்டும்.

இவ்வாறு அவர் கோரியுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்