முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவணிமூல திருவிழா முடிந்து குன்றத்துக்கு திரும்பினார் முருகப்பெருமான்

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், செப்.- 1 - மதுரையில் நடைபெற்ற ஆவணி மூல திருவிழாவில் பாண்டிய ராஜாவாக பங்கேற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் ஆகியோர் திருவிழா முடிந்து நேற்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கு திரும்பினர். உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணி மூல திருவிழாவும் ஒன்று. இத்திருவிழாவில் பாண்டிய ராஜாவாக பங்கேற்க திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து கடந்த 27 ம் தேதி முருகப் பெருமான், தெய்வானை அம்மனுடன் புறப்பாடாகினார். திருவிழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முருகப் பெருமான், தெய்வானை அம்மன் நேற்று முன்தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 16 கால் மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையிடம் விடைபெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பூஜைகள் முடித்து கோயிலில் இருந்து புறப்பாடாகி மதுரை யானைக்கல் அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு மாலை 4 மணிக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடித்து சர்வ அலங்காரமாகி பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் புறப்பாடாகினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்