எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெரம்ர், ஜன. 20 - சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரியில் கள்ள நோட்டுகளுடன் 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் வடமாநிலங்களை சேர்ந்த கள்ள நோட்டு கும்பலை கைது செய்தனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை இவர்கள் நாடு முழுவதிலும் புழக்கத்தில் விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அங்கு அச்சடிக்கும் கள்ள நோட்டுக்களை இந்திய இளைஞர்கள் மூலமாகவே புழக்கத்தில் விட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இதன்பிறகு கள்ள நோட்டு வேட்டையை தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரப்படுத்தினர். கட்டிட தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் போல ஊடுருவி கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட வாலிபர்கள் அணி அணியாக கைது செய்யப்பட்டனர். சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் கள்ள நோட்டுகளை மாற்றிய வெளிமாநில வாலிபர்களும் போலீசில் சிக்கினர்.
இதன்பிறகு ஓரளவுக்கு கள்ள நோட்டுகள் கட்டுப்படுத்தப்பட்டாலும், புழக்கத்தில் விடப்பட்ட கள்ள நோட்டுகள் ஆங்காங்கே பொதுமக்களிடம் சிக்கி குழப்பத்தை ஏற்படுத்தின. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருந்தது. போலீஸ் கமிஷனர் அலுவலக உணவகத்திலும் கள்ள நோட்டு சிக்கியது. 500 ரூபாய் நோட்டுகளே அதிக அளவில் கள்ள நோட்டுகளாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
இதனால் ஒரு சில கடைகளில் 500 ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு கூட தயக்கம் காட்டினர். அந்த அளவுக்கு கள்ள நோட்டுகளின் ஆதிக்கம் சென்னையில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில்எருக்கஞ்சேரி பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் அங்கு விரைந்து சென்றார்.
பின்னர் எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் கோவி.மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் குணவர்மன், சம்பத் ஆகியோருடன் அவர் மூலக்கடை செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு வேகமாக வந்த காரை போலீசார் மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. போலீசார் விரட்டிச் சென்று காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்தவர்களில் 3 பேர் தப்பி விட்டனர். இஸ்மாயில் என்பவர் மட்டும் சிக்கினார். காரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இஸ்மாயிலை கைது செய்து விசாரணை நடத்தினர். கொடுங்கையூர் சிவசங்கரன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அவர் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தது தெரியவந்தது. அந்த வீட்டுக்கு போலீசார் அதிரடியாக சென்று சோதனையிட்டனர்.
அங்கிருந்த ரபீக் என்பவர் கல்லால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பி ஓடிவிட்டார். அந்த வீட்டில் இருந்து ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றினர். அனைத்தும் ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளாகும். வீட்டில் இருந்த விலை உயர்ந்த டி.வி., கம்ப்யூட்டர் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்னன.
இதைத் தொடர்ந்து மண்ணடியில் உள்ள ஒரு வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியதில் மண்ணடி பகுதியைச் சேர்ந்த முன்னாவு, வாசிம் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் லட்சக்கணக்கான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என தெரிகிறது.
இந்த கள்ள நோட்டுகள் வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பி ஓடிய ரபீக்கை போலீசார் தேடி வருகிறார்கள். இவர் ஏற்கனவே ஒருமுறை கள்ள நோட்டு வழக்கில் சிக்கியவர். கள்ள நோட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பியோடிய கள்ளநோட்டு கும்பல் தலைவன் முகமது ரபீக்கை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் முக்கிய பிரமுகர்கள் யாரேனும் செயல்பட்டுள்ளார்களா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 20 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.