எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெரம்ர், ஜன. 20 - சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரியில் கள்ள நோட்டுகளுடன் 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் வடமாநிலங்களை சேர்ந்த கள்ள நோட்டு கும்பலை கைது செய்தனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை இவர்கள் நாடு முழுவதிலும் புழக்கத்தில் விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அங்கு அச்சடிக்கும் கள்ள நோட்டுக்களை இந்திய இளைஞர்கள் மூலமாகவே புழக்கத்தில் விட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இதன்பிறகு கள்ள நோட்டு வேட்டையை தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரப்படுத்தினர். கட்டிட தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் போல ஊடுருவி கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட வாலிபர்கள் அணி அணியாக கைது செய்யப்பட்டனர். சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் கள்ள நோட்டுகளை மாற்றிய வெளிமாநில வாலிபர்களும் போலீசில் சிக்கினர்.
இதன்பிறகு ஓரளவுக்கு கள்ள நோட்டுகள் கட்டுப்படுத்தப்பட்டாலும், புழக்கத்தில் விடப்பட்ட கள்ள நோட்டுகள் ஆங்காங்கே பொதுமக்களிடம் சிக்கி குழப்பத்தை ஏற்படுத்தின. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருந்தது. போலீஸ் கமிஷனர் அலுவலக உணவகத்திலும் கள்ள நோட்டு சிக்கியது. 500 ரூபாய் நோட்டுகளே அதிக அளவில் கள்ள நோட்டுகளாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
இதனால் ஒரு சில கடைகளில் 500 ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு கூட தயக்கம் காட்டினர். அந்த அளவுக்கு கள்ள நோட்டுகளின் ஆதிக்கம் சென்னையில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில்எருக்கஞ்சேரி பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் அங்கு விரைந்து சென்றார்.
பின்னர் எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் கோவி.மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் குணவர்மன், சம்பத் ஆகியோருடன் அவர் மூலக்கடை செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு வேகமாக வந்த காரை போலீசார் மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. போலீசார் விரட்டிச் சென்று காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்தவர்களில் 3 பேர் தப்பி விட்டனர். இஸ்மாயில் என்பவர் மட்டும் சிக்கினார். காரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இஸ்மாயிலை கைது செய்து விசாரணை நடத்தினர். கொடுங்கையூர் சிவசங்கரன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அவர் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தது தெரியவந்தது. அந்த வீட்டுக்கு போலீசார் அதிரடியாக சென்று சோதனையிட்டனர்.
அங்கிருந்த ரபீக் என்பவர் கல்லால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பி ஓடிவிட்டார். அந்த வீட்டில் இருந்து ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றினர். அனைத்தும் ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளாகும். வீட்டில் இருந்த விலை உயர்ந்த டி.வி., கம்ப்யூட்டர் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்னன.
இதைத் தொடர்ந்து மண்ணடியில் உள்ள ஒரு வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியதில் மண்ணடி பகுதியைச் சேர்ந்த முன்னாவு, வாசிம் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் லட்சக்கணக்கான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என தெரிகிறது.
இந்த கள்ள நோட்டுகள் வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பி ஓடிய ரபீக்கை போலீசார் தேடி வருகிறார்கள். இவர் ஏற்கனவே ஒருமுறை கள்ள நோட்டு வழக்கில் சிக்கியவர். கள்ள நோட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பியோடிய கள்ளநோட்டு கும்பல் தலைவன் முகமது ரபீக்கை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் முக்கிய பிரமுகர்கள் யாரேனும் செயல்பட்டுள்ளார்களா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
11 Jul 2025சென்னை : மாவீரர் அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் புகழாரம்
11 Jul 2025சென்னை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
11 Jul 2025சென்னை : கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
-
வெள்ளம், நிலச்சரிவு பாதித்த 6 மாநிலங்களுக்கு ரூ.1,067 கோடி நிதி
11 Jul 2025புதுடெல்லி : வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடியே 80 லட்சத்தை விடுவிக்க
-
அழுத்தத்தைக் கையாள தோனியிடம் கற்றுக் கொண்டேன்: தீப்தி சர்மா
11 Jul 2025லண்டன் : அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
-
கீப்பராக துருவ் ஜுரெல்: பி..சி.சி.ஐ.
11 Jul 2025இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதியான நபர் நிதீஷ் குமார் ரெட்டி : அனில் கும்ப்ளே புகழாரம்
11 Jul 2025லண்டன் : இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறுவதற்கு தகுதியான நபர் என்பதை நிதீஷ் குமார் ரெட்டி நிரூபித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ள
-
என்னை செதுக்கியவர்: கம்மின்சை புகழ்ந்த நிதீஷ் ரெட்டி
11 Jul 2025லண்டன் : இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ் எனக் கூறியுள்ளார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த கோலியின் விமர்சனத்திற்கு முதல் முறையாக காம்பீர் பதில்
11 Jul 2025பெங்களூரு : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விராட் கோலியின் விமர்சனத்திற்கு முதல் முறையாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீர் பதிலளித்துள்ளார்.
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகிறார் சுப்மன் கில்? - தேர்வு செய்ய பி.சி.சி.ஐ ஆர்வம்
11 Jul 2025புதுடெல்லி : இலங்கை, ஐ.சி.சி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா: - இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
11 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம்
12 Jul 2025மும்பை : யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளதற்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
லாக் அப் மரணங்கள்: விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
12 Jul 2025சென்னை, லாக் அப் மரணங்கள் தொடர்பாக, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.
-
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் ஆயிரம் சதவீதம் உறுதி: த.வெ.க. திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.