எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஏப்.- 25 - டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் போராடி தோற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 26-வது ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. அதிக தோல்விகளால் துவண்டுபோன டெல்லி அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாக இருந்தது. அணி மீண்டெழ இந்த போட்டியில் வெல்வது மிக முக்கியம் என கருதப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு சேவாக் தலைமையிலான டெல்லி அணியினர் பெரோஷா கோட்லா மைதானத்தில் களமிறங்கினர். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அதிரடி விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் தலைமையிலான வலுவான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் தன்னம்பிக்கையுடன் களமிறங்கியது. டாஸ் வென்ற கில்கிறிஸ்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் டெல்லி அணி பேட்செய்ய களமிறங்கியது. துவக்க வீரர்கள் வார்னர் மற்றும் சேவாக் தங்கள் அதிரடி ஆட்டத்தை துவக்கினர். இந்த ஜோடி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. குறிப்பாக சேவாக் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால் முதல் 5 ஓவர்களிலேயே டெல்லி 50 ரன்களை எட்டியது. இதையடுத்து வார்னர் 29 பந்துகளில் அரை சதம் அடித்தார். டெல்லி அணியின் முதல் 100 ரன்கள் 8.4 ஓவர்களிலேயே கிடைத்தது. சேவாக் 28 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த ஜோடியை பிரிக்க பஞ்சாப் பவுலர்கள் திணறினர். இந்நிலையில் டெல்லி அணியின் ஸ்கோர் 11.4 ஓவர்களில் 146 ஆக இருந்தபோது ஹுஸ்ஸேவின் பந்தில் விக்கெட் கீப்பர் கார்த்திக்கால் கேட்ச் செய்யப்பட்ட சேவாக் ஆட்டமிழந்தார். இவர் 35 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். அடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்த நாகர் 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையில் நாயரின் பந்தில் போல்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 14 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ஆக இருந்தது. இவரை அடுத்து வேணுகோபால் ராவ் களமிறங்கினார். இந்த நிலையில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த வார்னர், குமாரின் பந்தில் ஹாரிஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவர் எடுத்த ரன்கள் 77. அடுத்து வந்த பின்ச் சாவ்லாவின் பந்தில் 3 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து ஓஜா, வேணுகோபாலுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி அணியை சிறப்பாக கொண்டுசென்றனர். இதனால் 18.3 ஓவர்களில் டெல்லி அணி 200 ரன்களை தொட்டது. கடைசி 1.3 ஓவர்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து 31 ரன்களை சேர்க்க டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. வேணுகோபால் ராவ் ஆட்டமிழக்காமல் 28 ரன்களையும், ஓஜா 19 ரன்களையும் அடித்தனர். பஞ்சாப் அணி சார்பாக குமார், ஹுஸ்ஸே, சாவ்லா, நாயர் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டை வீழ்த்தினர்.
232 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் அதிரடி வீரர் பால் வல்தாட்டி ஆகியோரும் துவக்கம் முதலே அதிரடியை மேற்கொண்டனர். ஆனால் இந்த ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் எடுத்துள்ள வல்தாட்டி இம்முறை ரன் குவிக்க தவறினார். இவர் 14 ரன்களை எடுத்திருந்தபோது இர்பான் பதானின் பந்தில் நாகரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை அடுத்து மார்ஷ், கில்கிறிஸ்டுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக கில்கிறிஸ்ட், அகார்கரின் ஒரு ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகளை அடித்தார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 10.2 ஓவரில் 97 ஆக இருந்தபோது கில்கிறிஸ்ட், ஆரோன் பந்தில் போல்டானார். இவர் எடுத்த ரன்கள் 42. இவரை அடுத்து தினேஷ் கார்த்திக் 6 ரன்களே எடுத்த நிலையில் அகார்கரின் பந்தில் சேவாக்கிடம் பிடிகொடுத்து அவுட்டானார். பின்னர் ஹுஸ்ஸே, மார்ஷுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் அதிரடியாக ரன் சேர்த்தனர். குறிப்பாக மார்ஷ் தனது அதிரடியால் பஞ்சாப் அணிக்கு வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தினார். அணியின் ஸ்கோர் 15.2 ஓவரில் 153 ஆக இருந்தபோது ஹுஸ்ஸே 20 ரன்களில் ஹோப்ஸின் பந்தில் சேவாக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை தொடர்ந்து அபிஷேக் நாயர் களமிறங்கி சில அதிரடி ஷாட்களை ஆடினார். அணியின் ஸ்கோர் 184 க்கு வந்தபோது அதிரடியாக ரன் குவித்த மார்ஷ் அதிர்ச்சியளிக்கும் வகையில் மோர்கலின் பந்தை தவறாக கணித்து அடிக்க அது சேவாக்கின் கையில் கேட்ச் ஆனது. மிகப் பிரமாதமாக விளையாடிய மார்ஷ் 46 பந்துகளில் 95 ரன்களை குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும். இவர் ஆட்டம் இழந்ததும் பஞ்சாப் அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை மட்டுமே எடுத்தது. நாயர் ஆட்டமிழக்காமல் 17 ரன்களையும், ஹாரிஸ் 1 ரன்னையும் எடுத்திருந்தனர். டெல்லி தரப்பில் அகர்கர் 2 விக்கெட்டுகளையும், மோர்கெல், ஆரோன், பதான், ஹோப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். டெல்லி அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வென்று 5 போட்டிகளின் முடிவில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த ஐ.பி.எல். 4 வது தொடரில் டெல்லி அணி எடுத்த 231 ரன்களே இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.