எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஏப்.27 - அசாம் மாநிலத்தில் ஆட்சி அமைப்போம் என்று பாரதிய ஜனதா கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. மும்பை மாநகர பா.ஜ.க. ஊழியர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நிதின் கட்காரி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் அசாம் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தங்களது கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும் என்றும், அதனால் அம்மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைப்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத ஒரு அரசை தாங்கள் அமைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் தங்களது கட்சிக்கு அதிகமான இடங்கள் கிடைப்பது கடினம் என்றாலும் கணிசமான வெற்றியை பெறுவோம் என்றும் கட்காரி கூறினார். 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பெறும் வெற்றியின் மூலம் தங்களது கட்சியின் அமைப்பு ரீதியிலான, அரசியல் ரீதியிலான விரிவாக்கம் இருக்கும் என்றும் அவர் கூறினார். வரும் நாட்களில் இந்திய அரசியலில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறினார். பாரதிய ஜனதா கட்சி கடுமையாக பாடுபட்டுள்ளது. அதனால் தங்களது கட்சிக்கு இந்த 5 மாநில தேர்தலில் எதிர்பார்த்ததைவிட நல்ல வெற்றி கிடைக்கும் என்றும் கட்காரி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


