எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டோக்கியோ, மே. 30 - ஜப்பானை சேர்ந்த தொபுரு கார்ஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன்சிங். 80 வயதாகும் தொபுரு தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர். இவருக்கு பிரதமர் மன்மோகன்சிங் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.
இந்தாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் உடல்நிலை காரணமாக புது டெல்லியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்நிலையில் மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் பத்மஸ்ரீ விருதை தொபுரு கார்ஷிமாவுக்கு வழங்கினார். டோக்கியோவில் செயல்படும் ஜப்பான், இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தொபுருவுக்கு பத்மஸ்ரீ விருதை பிரதமர் வழங்கி கவுரவித்தார்.
1964 ம் ஆண்டு டோக்கியோ பல்கலைக் கழகத்தில் கல்விப் பணியை தொடங்கிய தொபுரு 1974 ம் ஆண்டில் தெற்காசிய வரலாற்று துறையின் தலைமை பேராசிரியராக பொறுப்பேற்று 20 ஆண்டு காலம் பணியாற்றியவர். இப்போது டோக்கியோ பல்கலைக் கழகத்தில் கவுரவ பேராசிரியராக உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


