முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோர்ஜி சென்ற ஹெலிகாப்டரை தேடும் ராணுவ வீரர்கள்

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Image Unavailable

இதாநகர்,மே.3 - அருணாசலப்பிரதேச மாநில முதல்வர் டோர்ஜிகாண்டு சென்ற விமானத்தை பூட்டானில் 3 பகுதிகளில் ராணுவத்தினர், அருணாசலப்பிரதேச மாநில போலீசார் ஆகியோர் தேடி வருகின்றனர். தவாங் நகரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை காலையில் ஹெலிகாப்படரில் முதல்வர் டோர்ஜிகாண்டு மற்றும் 4 பேர் சென்றனர். ஹெலிகாப்டர் சென்ற சிறிது நேரத்தில் காணாமல் போய்விட்டது. அவர்களை பற்றிய கதி என்னவென்று தெரியவில்லை. ஹெலிகாப்டரை தேடும் பணியில் ராணுவத்தினர், மாநில போலீசார், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டரானது தவாங் நகருக்கு அருகில் பூட்டான் நாட்டின் எல்லைப்பகுதிகளுக்குள் கீழே விழுந்திருக்கலாம் என்று கருதி அங்கு 3 பகுதிகளில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. தரைப்பகுதி மற்றும் வானத்தில் விமானம் மூலம் பறந்தும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தவாங் நகரையொட்டி மேற்குகமாங் மாவட்டத்திலும் தஷி யாங்ஷி மாவட்டத்தில் உள்ள மொபி கிராமத்திலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் வரைபடத்தை வைத்தும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தெஜ்பூர், கர்னல் ஜோஷி ஆகிய பகுதிகளில் ராணுவத்தினர் முகாம் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்