முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      விளையாட்டு
Image Unavailable

சென்னை, மே. 3 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20  போட்டியில் சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ரன் வித்தியாசத்தி ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் முன்னி லை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில், சென்னை கிங்ஸ் தரப்பில், மைக் ஹஸ்சே மற்று ம் சுரேஷ் ரெய்னா இருவரும் அதிரடியாக ஆடி, அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினர். கேப்டன் தோனி மற்றும் மார்கெல் இரு வரும் அவர்களுக்கு பக்கபலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, மார்கெல் அபாரமாக பந்து வீசி 3 முக் கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பொலிஞ்சர் மற்றும் ஜகாதி ஆகியோர் அவருக்கு பக்கபலமாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 39 - வது லீக்  ஆட்டம் நடந்த து. இதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணி பேட்டிங் கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் முரளி விஜய் மற்றும் மைக் ஹஸ்சே இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

சென்னை அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், ஒரு வீரர் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமும் அடித்தனர். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மைக் ஹஸ்சே அதிகபட்சமாக, 35 பந் தில் 59 ரன்னை எடுத்தார். இதில், 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்க ம். இறுதியில் அவர் ஓஜா வீசிய பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக துவக்க வீரர் மைக் ஹஸ்சே 41 பந்தில் 46 ரன்னை எடு த்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். தவிர, கேப்டன் தோனி 19 பந்தில் 21 ரன்னையும், மார்கெல் 6  பந்தில் 19 ரன்னையும் எடுத்தனர். 

டெக்கான் அணி சார்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஓஜா 26 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ஹர்மீத் சிங் 26 ரன் னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். டுமினி, இஷாந்த் சர்மா, கிறி ஸ்டியன் மற்றும் மிஸ்ரா ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. 

டெக்கான் அணி 166 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இல க்கை சென்னை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னை எடுத்தது. 

இதனால் சென்னை கிங்ஸ் இந்த லீக் ஆட்டத்தில் 19 ரன் வித்தியாசத்தி ல் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்துள்ளது. 

டெக்ககான் அணி தரப்பில், துவக்க வீரர் சோகல் அதிகபட்சமாக, 30 பந்தில் 56 ரன்னை எடுத்தார். தவிர, எஸ் தவான் 19 ரன்னையும், சிப்ளி 15 ரன்னையும், கேப்டன் சங்கக்கரா 15 ரன்னையும், ஒயிட் 13 ரன்னையும், டுமினி 17 ரன்னையும் எடுத்தனர். 

சென்னை அணி சார்பில், மார்கெல் 38 ரன்னைக் கொடுத்து 3 விக்கெ ட் எடுத்தார். தவிர, பொலிஞ்சர் மற்றும் ஜகாதி ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மார்கெல் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்