முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழித்தவர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

நொய்டா, ஜூலை.1 - கணினி பயிற்சி நிலையத்தில் 17 வயது சிறுமியை கற்பழித்ததாக ஸகீர் என்பவர் கைது செய்யப்பட்டார். ஹபிப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீஸார் தெரிவித்ததாவது: ஹபிப்பூரில் கணினி பயிற்சி நிலையம் உள்ளது.  இந்த கணினி பயிற்சி நிலையத்தில் ஸகீரும், அந்த சிறுமியும் பயின்று வருகின்றனர். இம்மாதம் 8-ம் தேதி கணினி பயிற்சி நிலையத்திலிருந்து அனைவரும் வெளியேறினதும், இந்த சிறுமியை அங்கு இருக்குமாறு ஸகீர் கூறியுள்ளான். இதை நம்பிய அந்த சிறுமி அங்கு இருந்தபோது, துப்பாக்கி முனயில் மிரட்டி சிறுமியை ஸகீர் கற்பழித்தான். 

 இதற்குப் பிறகும் ஸகீர் அந்த சிறுமியை மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன அந்த சிறுமி அவனைப் பார்க்க விரும்பவில்லை. இதனால் வெறுப்படைந்த அந்த சிறுமி மன உளைச்சலுக்கு உள்ளானாள். இதன்பிறகு தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தாள். அவர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தனர். பிஸ்ராக் காவல் நிலைய போலீஸார்  வழக்குப் பதிவு செய்து ஸகீரை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்