முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதல் மணம்புரிந்தார் இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ்

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜூலை. 24 - இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆஞ்செலோ மேத்யூஸ்-ன் காதல் திருமணத்தில் சாட்சிக் கையெழுத்து போட்டுள்ளார்கள் இலக்கை அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது தம்பியுமான இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே. 

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும், ராஜபக்சே அன் கோவுக்கும் நல்ல நெருக்கம், பழக்கம் உண்டு. அதை மாத்யூஸின் திருமணம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா, ராஜபக்சே கட்சியில் எம்.பியாக இருக்கிறார். இந்த நிலையில் மாத்யூஸின் காதல் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டுள்ளார் ராஜபக்சே.

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனான ஆஞ்செலோ மேத்யூஸ்,தனது பள்ளி கால தோழியான ஹெஷானி சில்வாவை பம்பாலாபிட்டியாவில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்ற இந்தக் காதல் திருமணத்திற்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, பாதுகாப்பு துறை மந்திரி கோத்தபய ராஜபக்சே சாட்சிக் கையெழுத்திட்டனர். அதிபரும், அவரது தம்பியும் நேரில் வந்து சாட்சிக் கையெழுத்து போட்டதால் மாத்யூஸ் தரப்பு ரொம்ப மகிழ்ச்சியாகி விட்டதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்