முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை லீனாவின் காதலன் சுகாஷ் குண்டர் சட்டத்தில் அடைப்பு

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.8 - பல்வேறு மோசடி வழக்கில் கைதான நடிகை லீனாவின் காதலன் சுகாஷை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை லீனா மரியாவின் காதலன் சுகாஷ் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகாஷ், கர்நாடக அரசின் நலத்திட்ட பணிகளுக்கு டெண்டர் வாங்கித் தருவதாக கூறி பெங்களூர் தொழில் அதிபர்களிடம் கோடிக் கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். டெல்லியிலும் இவர் மோசடி செய்தது அம்பலமானது.

இது தவிர சென்னை அம்பத்தூரில் இருக்கும் ஒரு வங்கியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்து இருப்பதும், சோலையூர் தொழில் அதிபரிடம் பணம் வாங்கி ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்தது. பல்வேறு மாநிலங்களில் மோசடி செய்ததாக சுகாஷ் மீது 10-க் கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

பல்வேறு மோசடி வழக்கு களில் கைது செய்யப்பட்ட சுகாஷ் தற்போது புழல் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. இந்த நிலையில் சுகாஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு, புழல் சிறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து சுகாஷ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது ஆனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்