முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லை அருகே அலுவலகங்களை மூட உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், ஆக.28 - இந்திய எல்லைக்கு அருகே உள்ள அரசு அலுவலகங்களை காலவரையின்றி மூடும்படி பாகிஸ்தான்  அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவித்துள்ளன. 

இதனால் எல்லைக் கட்டுப்பாடு கோட்டிலிருந்து, 3 கி.மீ. தொலைவுக்குள்பட்ட பகுதியில் இருக்கும் அரசு அலுவலகங்களை காலவரையின்றி மூடுமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டன. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்