முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் அடைக்கப்பட்ட அசாராம் ஜாமீன் கேட்டு மனு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஜோத்பூர், செப்.4 - ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்ட அசாராம் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆஸ்ரமத்தில் தங்கிப் படித்த உத்தரப்பிரதேச மாணவியை கற்பழித்ததாக அசாராம் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

72 வயதான அசாராம் நரம்புக் கோளாறால் ஆண்மைத் தன்மையை இழந்து விட்டதால் கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட முடியாது என்றும், நான் நிரபராதி என்றும் கூறினார். இதையடுத்து அவருக்கு ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் முழு ஆண்மை பலத்துடனும், நல்ல உடல் நலத்துடனும் இருப்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணைக்குப் பின் ஜோத்பூர் கோர்ட்டில் அசாராம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாத அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அவரது ஆதரவாளர்கள் கோர்ட்டில் குவிந்திருந்ததால் அசாராம் சென்ற வேனுக்குப்பின்னால் போலீஸார் அணிவகுத்துச் சென்றனர்.  அவருக்கு சிறையில்   தகுந்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என்று அவரது வக்கீல் கேட்டுக்கொண்டார். அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

 அசாராமை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி அவரது வக்கீல்  ஜோத்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே இந்த வழக்கில் ஜோத்பூர் போலீஸார் மெத்தனமாகவும், மென்மையாக செயல்படுவதாகவும் எனவே வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கற்பழிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஷாஜகான்பூரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்