எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஏப்.21 - ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டு
சதி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனுவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நிராகரித்தது. அவரை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டது. மேலும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டதோடு அவரையும் உடனடியாக கைது செய்ய சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஓ.பி. ஷைனி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஆ.ராசா அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் கனிமொழியும், சரத்குமாரும் அடைக்கப்பட்டனர்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துமாறு சி.பி.ஐ.க்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சி.பி.ஐ. விசாரணையை கண்காணித்து வந்ததோடு கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்தியது. ஊழல் குற்றச்சாட்டின் முக்கிய குற்றவாளியான முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா,பிரபல அரசியல் தரகர் நீரா ராடியா, ராசாவின் தனிச்செயலாளராக இருந்த சந்தோலியா,டி.பி. ரியால்டி பிரமோட்டர் பால்வா, ராசாவின் பினாமி சாதிக்பாட்சா (இவர் தற்கொலை செய்துகொண்டார்) கருணாநிதியின் மகளும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி எம்.பி., மற்றொரு பங்குதாரரான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், மத்திய தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா மற்றும் மேலும் பலரிடம் சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அதனையடுத்து சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவின்படி ஆ.ராசா, பல்வா, சித்தார்த்த பெகுரா,பல்வா உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணையில் 2 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ஆதாயம் அடைந்த டி.பி.ரியால்டி நிறுவனத்தின் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியிருப்பது தெரியவந்தது. இதனையொட்டி கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, சரத்குமார் ஆகியோர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. விசாரணையில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதில் கனிமொழிக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது. சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி கூட்டு சதி செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனையொட்டி கடந்த 6-ம் தேதி ஆஜராகும்படி சி.பி. ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கனிமொழியும் சரத்குமாரும் கடந்த 6-ம் தேதி டெல்லி சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜரானார்கள். கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜரானார். அப்போது அவர் வாதாடுகையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார். சி.பி.ஐ. சார்பாக மூத்த வழக்கறிஞர் லலித் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் வாதாடுகையில் கலைஞர் டி.வி.க்கு ரூ. 200 கோடி கைமாறியதில் கனிமொழி முக்கி பங்கு வகித்துள்ளார். கலைஞர் டி.வியை கனிமொழிதான் முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றும் முழு நிர்வாகத்தையும் அவர்தான் கவனித்து வந்தார் என்றும் கூறினார். அன்றைய தினமே கனிமொழியும் சரத்குமாரும் தங்களுக்கு ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கின் விசாரணை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நாட்களில் சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழியும் சரத்குமாரும் ஆஜராகி வந்தனர். சென்னை வருமானவரி அலுவலகத்தில் கடந்த 12,13 ஆகிய தேதிகளில் கனிமொழி நேரில் ஆஜரான பின்னர் மே 13-ம் தேதி இரவு விமானம் மூலம் டெல்லி வந்தார். கனிமொழியின் ஜாமீன் மனுமீதான விசாரணையில் அவருக்கு ஜாமீன் வழங்கலாமா என்பது குறித்து கடந்த 14-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பை நீதிபதி ஷைனி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி கடந்த வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆஜரானார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்கு ஓய்வு வேண்டும் என்று நீதிபதி ஷைனியிடம் கனிமொழி முறையிட்டார். இதையடுத்து நீதிபதி ஷைனி அனுமதி வழங்கவே கனிமொழி நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். ஓய்வு எடுத்த பின் அன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் சரத்குமாரும் ஆஜராகியிருந்தனர். கனிமொழியுடன் அவரின் கணவர் அரவிந்தன் உடனிந்தார்.
இந்தநிலையில் கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர்களின் ஜாமீன் மனு நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர்களின் ஜாமீன் மனுவை நீதிபதி ஷைனி நிராகரித்துவிட்டார். மேலும் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்யும்படியும் உத்தரவிட்டார். இரண்டு பேர்களின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த இரண்டு பேர்களையும் உடனிடயாக காவலில் வைக்கும்படி உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி ஷைனி கூறினார். வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வருவதால் கனிமொழியையும் சரத்குமாரையும் இன்று காலை 10 மணிக்கு ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி ஷைனி கூறினார்.கனிமொழியும் சரத்குமாரும் கைது செய்யப்பட்டு டெல்லியில் மிகுந்த பாதுகாப்பு உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தன்வினை தன்னைச் சுடும்
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் கிரானைட் சுரங்க ஊழலை கண்டுபிடித்து தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக மு.க.அழகிரியின் தூண்டுதலுடன் தினபூமி ஆசிரியர் மீது பொய்வழக்கு தொடர்ந்து திருடர்களைப் போல நள்ளிரவில் வீட்டு காம்பவுண்டு சுவர் மீது ஏறிக்குதித்து, அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து தினபூமி ஆசிரியரை கைது செய்து சிறைக்கு அனுப்பியது கருணாநிதியின் போலீஸ்.
இப்படி தி.மு.க. ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தை பறித்து, பத்திரிகையாளர்கள் மீதே பொய்வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியதன் பலனை கருணாநிதி குடும்பம் தற்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சிக்கு லஞ்ச பணம் கைமாறிய விவகாரத்தில் கருணாநிதி மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும்வரை கனிமொழியின் தந்தை முதல் அமைச்சராக இருந்துள்ளார். அண்ணன் துணை முதல்வராக இருந்துள்ளார். மற்றொரு அண்ணன் தற்போதும் மத்திய அமைச்சராக உள்ளார். இவர்களால்கூட கனிமொழி சிறைக்கு செல்வதை தடுத்து நிறுத்த முடியவில்லை. விரைவில் கருணாநிதி உள்பட கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் கனிமொழிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் கருணாநிதி குடும்பம் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. தன்வினை தன்னைச் சுடும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு