எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்,மார்ச்.21 - உக்ரைனின் கிரிமியாவை தனது பகுதியுடன் இணைத்துக் கொண்டால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிரிமியாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பெருமளவிலான மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிரிமியா பகுதியில் உள்ள நிர்வாக அதிகாரிகள் துணையுடன் உடன்படிக்கை ஒன்றை ரஷ்ய அதிபர் புதின் ஏற்படுத்தியுள்ளார். விரைவில் ரஷ்ய நாடாளு மன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, கிரிமியா பகுதி ரஷ்யாவுடன் இணைந்ததாக அவர் அறிவிக்க வுள்ளார்.
ரஷ்யாவின் இச்செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறிய தாவது: -
கிரிமியா விவகாரத்தில் புதின் தனது தரப்பு கருத்தைக் கூறி வருகிறார். ஆனால், என்னைப் பொறுத்தவரை புதினும், ரஷ்யாவும் வரலாற்றின் தவறான பக்கத்தில் இடம்பிடித்துள்ளனர் என்றே கருதுகிறேன். புதினின் செயல்பாடுகள் எனக்கு மிகுந்த அதிருப்தியை அளித்துள்ளன என்றார்.
அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னே கூறும்போது, இந்த விவகாரத்தின் மூலம் ரஷ்யா மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. சட்டவிரோதமான முறையில் கிரிமியாவை இணைத்துக் கொண்டால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும். ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சர்வதேச அளவில் தனிமைப் படுத்தப்படும் சூழ்நிலையை ரஷ்யா எதிர்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை தொடர்பு கொண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசினார்.
கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதற்கான காரணத்தை புதின் விளக்கினார்.
புதினிடம் பேசிய மன்மோகன் சிங், “இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு இணைந்து செயல்பட வேண்டும். அரசியல் ரீதியாகவும், ராஜ்ஜிய ரீதியாகவும் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் நலனை பாது காக்கும் வகையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய தாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உக்ரைனில் ஏற்பட்டுள்ள நிலைமையை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்புவது குறித்து பேசினார்.
ஐரோப்பிய ஒன்றியம், கனடாவைத் தொடர்ந்து ஆஸ்தி ரேலியாவும் பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், விசா வழங்குவதற்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் விவகாரத்தில் முக்கிய பங்காற்றிய ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 12 அதிகாரிகள் மீது இந்த தடையை விதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
ரஷ்யாவின் செயலுக்கு நேட்டோ அமைப்பும், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரஷியாவுடன் கிரிமியா இணைக்கப்பட்டதன் மூலம் வரலாற்றுப் பிழை சரிசெய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் இதை வரவேற்க வேண்டும் என்று சோவியத் யூனியனின் கடைசி தலைவர் மிகைல் கார்பச்சேவ் கூறியுள்ளார்.
முந்தைய சோவியத் யூனியனின் ஒரு பகுதியே கிரிமியா. சோவியத் யூனியனில் ரஷியாவும், உக்ரைனும் அங்கம் வகித்தபோது, சோவியத் தலைவர் நிகிடா குருஷ் சேவ்வால் இந்த தீபகற்பம் ரஷியாவிடம் இருந்து உக்ரைனுக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் ரஷியா மீது பொருளாதார தடை விதிப்பதற்கு வலுவான காரணங்கள் வேண்டும். மேலும் இதனை ஐ.நா.வும் ஆதரிக்க வேண்டும். கிரிமியாவை ரஷியா மீண்டும் எடுத்துக்கொண்டது வலுவான காரணம் அல்ல. கிரிமிய மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்றி பொது வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளது என்றார் அவர்.
18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து ரஷியாவின் கருங்கடல் படைப் பிரிவினரின் வசிப்பிடமாக கிரிமியா இருந்துவருகிறது. 1954-ல் இப்பகுதி உக்ரைனுக்கு சோவியத் தலைவரால் அளிக்கப்பட்டது. எனவே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்