முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதியில் இந்தியா - பாக்., மோதும்: மியாண்டட் நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

கராச்சி, மார்ச். 24 - வங்கதேசத்தில் நடந்து வரும் டி _ 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் என்று முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். 

இது குறித்து முன்னாள் கேப்டன் மியாண்டட் கராச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது _ 

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 

பாகிஸ்தான் அணியின் இந்தத் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே முக்கிய காரணமாகும். இதனால் பாகிஸ்தானின் வாய்ப்பு முடிந்து விடவில்லை. 

வங்கதேசத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

பாகிஸ்தான் அணி தோல்வியில் இருந்து மீண்டு எஞ்சிய 3ஆட்டத்திலும் வென்று அந்த பிரிவில் முதல் இடத்தைப் பிடிக்கும்.

பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் அரை இறுதி சுற்றில் நுழையும். 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோத வாய்ப்பு உள்ளது. எங்களது பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் சுழற் பந்தை கையாள முடியாததால் தோல்வியை சந்தித்தனர். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்