எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலாலம்பூர்,மார்ச்.28 - மலேசிய விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் 122 பொருள்கள் தெற்கு இந்திய பெருங்கடலில் மிதந்து வருவதாகவும், அப்பகுதியில் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் மலேசிய அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி கடந்த மார்ச் 8-ம் தேதி புறப்பட்ட எம்.எச். 370 விமானம், ரேடாரின் கண் காணிப்பிலிருந்து மறைந்து திடீரென மாயமானது. அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக் கும் என கருதப்படுகிறது. அங்கு நடைபெற்று வந்த தேடுதல் பணிகள், மோசமான வானிலை காரணமாக கடந்த செவ் வாய்க்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் காலை வானிலையில் முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேடுதல் பணி மீண்டும் தொடங்கியது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடு கள் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரான்ஸின் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததில் தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தின் 122 பொருள்கள் மிதப்பது தெரியவந்துள்ளது. பெர்த்தில் இருந்து 2,557 கி.மீ. தூரத்தில் கடல் பகுதியில் மிதந்து வரும் அந்த பொருள்களின் அளவு ஒரு மீட்டர் நீளம் முதல் 23 மீட்டர் நீளம் வரை உள்ளதாகத் தெரிகிறது. தேடுதல் பணியை முன்னின்று நடத்தி வரும் ஆஸ்திரேலியாவுக்கு இந்த புகைப்படங்களை அனுப்பிவைத்துள்ளோம்.
எனினும், அந்த பொருள்கள் எம்.எச். 370 விமானத்தின் பாகங்களா என்பதை இப்போதைக்கு உறுதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். பிரான்ஸைப் போன்று ஆஸ்திரேலியாவும், சீனாவும் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை அனுப்பிவைத்துள்ளது. அவை அனைத்தும் விமானம் விழுந்து கிடக்கும் இடத்தை அறிய உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசியதாவது: “இப்போது வரை கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப் படையில் எம்.எச். 370 விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகிவிட்டது என்றும், அதில் பயணம் செய்த 239 பேரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் மலேசிய அரசு அறிவித்துள்ளது.
விமானம் கடைசியாக பறந்ததாக கருதப்படும் பகுதியில், அதன் சிதைந்த பாகங்கள் சில மிதந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிதைந்த விமானத்தில் அனைத்து பாகங் களையும் மீட்க முடியாமல் போனால் கூட, ஒரு சில பாகங்களையாவது மீட்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.
தேடுதல் பணியில் 12 விமானங் களும், 2 கப்பல்களும் ஈடுபட்டுள்ளன. விமானத்தில் பைலட்டுகளின் உரையாடல்கள் பதிவாகியிருக்கும் கறுப்புப் பெட்டியை தேடுவதற்கான கருவி ஆஸ்திரேலிய கப்பல் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த பகுதி ஆஸ்திரே லியாவுக்கு அருகில் உள்ள பகுதி என்பதை கருத்தில் கொண்டு, மோசமான வானிலையையும் பொருட்படுத்தாது மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடப்போவதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு உறுதியளித்துள்ளேன்” என்றார். பின்னர், விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தீர்மானத்தை பிரதமர் டோனி அபோட் கொண்டு வந்தார்.
அவர் கூறுகையில், “உயிரிழந்த 239 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இறந்துவிட்டதாக கருதப்படும் 6 ஆஸ்திரேலியர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி, அவர்களின் இதயத்தில் ஏற்பட்டுள்ள வலியை நீக்க நம்மிடம் வார்த்தைகளே இல்லை. அன்புக்குரியவர்களை இழந்து வாடும், அந்த குடும்பத்தினரின் துக்கத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.” என்றார்.
கடைசியாக விமானத்திலிருந்து வந்த சிக்னலை பிரிட்டனின் இம்மர்ஸாட் செயற்கைக்கோள் நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதை ஆய்வு செய்ததில், தெற்கு இந்திய பெருங்கடலில் விமானம் நொறுங்கி விழுந்திருக்கும் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கடந்த திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தார் என் பது நினைவுகூரத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.