எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை,ஏப்.11 - நெல்லையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க.வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதனைத்தொடர்ந்து நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வக்கீல் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று பிற்பகல் சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார். பின்பு நெல்லை நீதிமன்றம் எதிரே உள்ள பெல்நகர் மைதானத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு வந்து பேசுகிறார். நெல்லை வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. சார்பாக பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாளை ஜான்ஸ் பள்ளி மைதானம் முதல் பெல்நகர் பொதுக்கூட்ட மேடை வரை சாலையின் இருபுறமும் டிஜிட்டல் வரவேற்பு போர்டுகள், வரவேற்பு வளைவுகள், அ.தி.மு.க. கொடி தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேடை அருகே பூக்கள், காய்கறிகள், பழங்கள், தென்னங்கதிர்கள் கொண்டு பிரமாண்ட வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள செண்டை மேளம், பாண்டு வாத்தியங்கள், கொம்பு வாத்தியம் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூரண கும்ப மரியாதை, முளைப்பாரி வரவேற்பும் அளிக்கப்படுகிறது. கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் அமை சுமார் 40 ஆயிரம் சேர்கள் போடப்பட்டுள்ளன. அதுபோக சுமார் 1 லட்சம் பேர் பார்க்ககூடிய வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு வரும் பொது மக்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்த பாளை மருத்துவக்கல்லூரி மைதானம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மைதானத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடைக்கு கிழக்கு பகுதியில் முக்கிய பிரமுகர்கள் வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடைக்கு அருகே மற்றோரு மேடை அமைக்கப்பட்டு அதில் இன்னிசை கச்சேரி மற்றும் தேர்தல் பிரசார கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கழக அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன், அமைச்சர் செந்தூர்பாண்டியன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முத்துகருப்பன் எம்.பி., தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையாபாண்டியன் ஆகியோர் செய்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று காலை முதலே பாளை ஜான்ஸ் பள்ளி மைதானம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானங்கள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரன் தலைமையில் துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், சாம்சன் ஆகியோர் மேற்பார்வையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் சிறப்பு பாதுகாப்பு படையினரும் நெல்லை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். கூட்டத்திற்கு வருபவர்களை சோதனை செய்ய மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் உள்ள வீடுகளின் மாடிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


