எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போர்ட்ஆப் ஸ்பெயின், ஜூன் - 8 - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக ஒரு டுவெண்டி -20 போட்டி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றம் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கேப்டன் மகேந்திரசிங் தோனி, காம்பீர், யுவராஜ்சிங் போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வில் இருப்பதால் இந்திய அணி இளம் வீரர்களுடன் சுரேஷ் ரெய்னா தலைமையில் களமிறங்கியுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டுவெண்டி - 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. அடுத்ததாக ஒருநாள் போட்டித் தொடர் துவங்கியது. போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சம்மி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். துவக்க வீரர்களாக சிம்மன்ஸ் மற்றும் எட்வர்ட்ஸ் களமிறங்கினர். ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினர். இந்திய பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. இதனால் 7-வது ஓவரின் துவக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் விக்கெட்டை 23 ரன்களிலேயே இழந்தது. சிம்மன்ஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குமாரின் பந்துவீச்சில் ஹர்பஜன்சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரைத் தொடர்ந்து பிராவோ களமிறங்கினார். இவரும் அதிக நேரம் நீடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 28 ஆக இருந்தபோது 4 ரன்களை மட்டும் எடுத்திருந்த பிராவோ, முனாப்பட்டேலின் பந்தில் சர்மாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இந்நிலையில் சர்வான் துவக்க வீரர் எட்வர்ட்ஸுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்தது. ஆனால் ஸ்கோர் 59 ஆக இருந்தபோது 21 ரன்களை எடுத்திருந்த எட்வர்ட்ஸ், ஹர்பஜனின் சுழலில் சிக்கினார். அந்த கேட்சை அருமையாக பிடித்தவர் விராட் கோஹ்லி. அடுத்து களமிறங்கிய சாமுவேல்ஸ் சிறப்பாக விளையாடினார். சாமுவேல்ஸ் மற்றும் சர்வான் ஜோடி அணியை மீட்கும் வகையில் விளையாடியது. இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை சமாளித்து ரன்களை எடுத்தது. இந்நிலையில் 38-வது ஓவரின் கடைசி பந்தில் 56 ரன்களை எடுத்திருந்த சர்வான், முனாப் பட்டேலின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 141. அடுத்து சாமுவேல்சுடன் பிராவோ இணைந்தார். இந்த ஜோடியும் ஓரளவு ரன்களை உயர்த்தியது. அணியின் ஸ்கோர் 177 ஆக இருந்தபோது 55 ரன்களை எடுத்திருந்த சாமுவேல்ஸ், ரெய்னாவின் அற்புதமான பந்தில் கிளீன்போல்டானார். தொடர்ந்து அதிரடி பிராவோவும் 22 ரன்களை எடுத்த நிலையில் ஹர்பஜன்சிங் பந்தில் பார்த்தீவ் பட்டேலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். தொடர்ந்து வந்தவர்கள் வருவதும் போவதுமாக இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை எடுத்தது. ராம்பால் ஆட்டமிழக்காமல் 9 ரன்களையும், மார்ட்டின் 2 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளையும், சுரேஷ் ரெய்னா, குமார், முனாப் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
215 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி துவக்கத்தில் ஆட்டம் கண்டது. துவக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேல் 13 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து துவக்க வீரர் ஷிகார் தவானுடன், இளம் வீரர் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். கோஹ்லி 2 ரன்களே எடுத்த நிலையில் ராம்பாலின் அற்புதமான ஒரு ஆர்ம் பாலில் விக்கெட் கீப்பர் பாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து பத்ரிநாத் களமிறங்கினார். இவர் தனது பங்கிற்கு 17 ரன்களை சேர்த்த நிலையில் பிஷூவின் பந்தில் விக்கெட் கீப்பரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இந்திய அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து தவானுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அணியின் எண்ணிக்கையை சிறிது சிறிதாக உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 104 க்கு உயர்ந்தபோது அரை சதம் கடந்திருந்த இளம் வீரர் தவான், மார்ட்டின் பந்தில் சிம்மன்ஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து ரோகித் சர்மாவுடன் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. அணியின் எண்ணிக்கை 184 க்கு உயர்ந்தபோது சுரேஷ் ரெய்னா 43 ரன்கள் எடுத்த நிலையில் மார்ட்டின் பந்தில் சிம்மன்ஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய யூசுப் பதான் 10 ரன்களை எடுத்த நிலையில் ராம்பாலிடம் காட் அண்டு போல்டு முறையில் அவுட்டானார். தொடர்ந்து 44.5 ஓவர்களிலேயே 217 ரன்களை அடித்த இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்தது. மிகச் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 68 ரன்களையும், ஹர்பஜன் சிங் 6 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றிகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கேப்டன் சுரேஷ் ரெய்னா, இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பிரமாதமாக இருந்தது என்றார். சில வீரர்கள் பீல்டிங்கில் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தோல்வி குறித்து கருத்து தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சம்மி, இன்னும் கூடுதலாக ரன் குவிக்க தவறியதே தங்கள் அணியின் தோல்விக்கு காரணம் என்றார். இந்திய அணியின் விக்கெட்டுகளை தொடர்ச்சியான இடைவெளியில் வீழ்த்தினாலும் தாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்தார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.