எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்காசி. ஜூன். 16 - தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உயர்தர கல்வியை இலவசமாக வழங்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசியில் எம்.எல்.ஏ. சரத்குமார் தெரிவித்தார்.
தென்காசி வ.உ.சி. நினைவு அரசு பொது நூலக வாசகர் பேரவை நடத்திய கல்வி வளர்ச்சி விருது வழங்கும் விழா தென்காசி நூலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவிற்கு தென்காசி வாசகர் பேரவையின் தலைவர் எஸ்.கே.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் கே.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.சேகர், கடையநல்லூர் எஸ்.முகைதீன் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நல் நூலகர் எம்.கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். நூலகர் கோ.இராமசாமி ஆண்டறிக்கை வாசித்தார். ராணி அண்ணா கல்லூரி பேராசிரியர் டாக்டர் வி.குருமூர்த்தி, டி.என்.நீலகண்டன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
தென்காசி எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார் தென்காசி பகுதியில் நடைபெற்று முடிந்த எஸ்.எஸ்.எல்.சி.,
ப்ளஸ் டூ தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற 100 க்கும் அதிமான பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- நாட்டில் பல அறிஞர்களை, அறிவாளிகளை உருவாக்கியது நூலகம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு எம்.எல்.ஏ. அப்பது எம்.பி. பாராளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றால் அவர் அங்குள்ள நூலகத்திற்கு சென்று அங்குள்ள பல்வேறு அரிய நூல்களை படிக்க வேண்டும். அப்படி படித்தவர்கள் மட்டுமே சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் சிற்பபாக பணியாற்றியுள்ளார்கள். மாணவர்கள், குழந்தைகள் அதிகமாக கேள்வி கேட்டால் தான் அவர்களுக்கு பல்வேறு விஷயங்கள் தெரியவரும். எனவே குழந்தைகள் கேள்வி கேட்கும் போது பெற்றோர்கள் கோபப்பட கூடாது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை பெற்றோர்கள் கூறவேண்டும்.
ஒரு காலத்தில் புத்தகம் படித்த காலம் போய் இப்போது கம்ப்யூட்டர் காலம் வந்து விட்டது. இப்போது எல்லா விஷயங்களையும் கம்ப்யூட்டரில் பார்த்து தெரிந்து கொள்வதோடு அதில் இருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். ஆனால் நாட்டில் அனைத்து குழந்தைகளுக்கும் அவ்வளவு வசதிகள் கிடைப்பதில்லை. எனவை அனைவருக்கும் பயன்தரும் வகையில் அரசு நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதனை அனைவரும் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.
நான் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் எனது தந்தை ஆல்இண்டியா வானொலி நிலையத்தில் வேலை பார்த்தவர் ஆனாலும் என்னை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். அதை போலவே அனைவரும் தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும்.
இங்கு பேசிய அனைவரும் தென்காசி நூலகத்திறஅகு சொந்த கட்டிடம் இல்லை என்று கூறினார்கள். மேலும் நான் பொது நூலக கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். அந்த கோரிக்கையை நான் ஏற்று கொள்கிறேன். எம்.எல்.ஏ. நிதி மூலம் செய்ய முடியாவிட்டாலும், எனது சொந்த நிதியிலாவது தென்காசியில் உள்ள நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித்தர விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுவேன். மாணவர்கள் ஆங்கிலத்தில் நன்கு பேச கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து மொழிகளையும் தெரிந்து கொள்வதோடு தாய் மொழி தமிழையும் நன்கு கற்று கொள்ள வேண்டும். இப்போது இந்த நூலகத்தில் 6 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பதாக கூறினார்கள். விரைவில் 12 ஆயிரம் உறுப்பினர்கள் சேரவேண்டும். தென்காசி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற பாடுபட்டு வருகிறேன். எனக்கு பல்வேறு பணிகள் உள்ளது. ஆனாலும் தென்காசி தொகுதி மக்களுக்கு நான் எப்போது முக்கியத்துவம் கொடுத்து பாடுபடுவேன். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கரை காட்ட வேண்டும். தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக நான் பாடுபடுவேன். நாளைய உலகம் இளைஞர்கள் உலகம் அதனை மனதில் கொண்டு இளைஞர்கள் படித்து முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆர்.ஜெ.வி.
பெல், தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியின் முதல்வர் திருமலை, ஹாஜி முஸ்தபா கமால்முகைதீன், வாசகர் பேரவை துணைத்தலைவர் கு.அருணாசலம், இணைச்செயலாளர் சு.அருணாசலம், தென்காசி நகர் மன்றத் துணைத்தலைவர் வே.கோமதிநாயகம், ரோட்டரி கிளப் ஆளுனர் கே.ராஜகோபால், முருகேசன், ஜேக்கப் அருள்மாணிக்கம், நகர்மன்ற உறுப்பினர் விஜயலெட்சுமி தென்காசி நல் நூலகர் கணேசன், வாசகர் பேரவை தலைவர் பாலசுப்பிரமணியன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் மாடசாமி பாண்டியன், எஸ்.கேசண்முகசுந்தரம், தென்காசி நகர செயலாளர் முத்துக்குமார்,சாந்தசீலன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், மாடசாமி பாண்டியன், சமக கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், அமைப்பு செயலாளர் காளிதாசன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுந்தர், நெல்லை மாவட்ட செயலாளர் தங்கராஜ்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை, தென்காசி நகர செயலாளர் வில்சன், தென்காசி ஒன்றிய செயலாளர் மிராசு, இலஞ்சி அருணாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் சுந்தர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
-
'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' தொடக்கம்:முதல்வர் ஸ்டாலின் இன்று ரயிலில் சிதம்பரம் பயணம்
13 Jul 2025சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ரயில் மூலம் சிதம்பரம் செல்கிறார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.