எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.12 - 3 ஆண்டுகளுக்கு நிலுவை இல்லாமல் திறம்பட செயல்படும் விசைத்தறி சங்கங்களுக்கே இலவச வேட்டி- சேலை தயாரிக்க ஆர்டர்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 95 சதவிதம் கொள்முதல் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பெறப்படுகிறது. இந்த விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் நூல் மற்றும் ரொக்க முன் பணத்தை கோஆப்டெக்ஸ் நிறுவனத்திலிருந்து பெற்று அதனை சேலைகளாகவோ அல்லது வேட்டிகளாகவோ நெய்து முன் பணத்தை சரிக்கட்டுதல் செய்கின்றனர்.
ஆனால் கடந்த ஆண்டு மட்டும் ரூ.4.57 கோடி அளவிற்கு இந்த விசைத்தறி சங்கங்களிலிருந்து இன்றைய தேதி வரை சரிக் கட்டுதல் செய்யப்படாமல் இந்தத் தொகைகள் பெரும்பாலும் விசைத்தறி சங்கங்களிடம் நிலுவையிலுள்ளது. கடந்த வாரம் ஒரு பிரபலமான தமிழ் பத்திரிக்கை இதுபோன்ற விசைத்தறி சங்கங்களில் பெரும்பாலான சங்கங்கள் வெறும் சங்கங்கள் என்ற செய்தியினை வெளியிட்டுள்ளது. இதனை பகுதியாக ஆமோதிக்கும் விதமாக உதவி இயக்குநர் (கைத்தறி), கோயம்புத்தூர் அவர்களுடன் கோஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் அவர்கள் ஆய்வு நடத்தியபோது இந்த சங்கங்களே இல்லை என்றும் இவை காணாமல் போய்விட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. பொது மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் கோஆப்டெக்ஸ் நிறுவனம் இதுபோன்ற திரும்பப் பெறாத முன்பணத் தொகைகளையோ அல்லது விலைக்கு வாங்கி தரப்படும் பருத்தி நூலையோ தருவது இனிவரும் காலங்களில் நடைபெறக் கூடாது என்று முடிவு செய்யப்படுகிறது, இதன் அடிப்படையில் கோஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு ஏற்படும் நட்டத்தைத் தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட உத்தரவு உடனடி நடவடிக்கைக்காக அமல்படுத்தப்படுகிறது.
1.விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் கோ-ஆப்டெக்ஸால் பதிவு செய்யப்படும் முன்னர் அவற்றின் உறுப்பினர்கள் குறித்த முழு விவரங்களைப் பெற வேண்டும். உறுப்பினர்களின் முகவரிகள், மொபைல் / தொலைபேசி எண்கள் கண்டிப்பாகப் பெறப்பட வேண்டும்.
2.முகவரிகளோ அல்லது மொபைல் / தொலைபேசி எண்களோ தரப்படாத எந்த உறுப்பினர்களும் உண்மையான உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
3.உதவி இயக்குநர் (கைத்தறி) அல்லது கோஆப்டெக்ஸின் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைப் பார்வையிட்டதற்கான அத்தாட்சிகள் இணைக்கப்பட வேண்டும்.
4.சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர் (கைத்தறி), இந்த புதிய சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் வேறு எந்த சங்கத்திலும் உறுப்பினர்களாக இல்லை என்று சரிபார்த்ததற்கான சான்றிதழ்களை தரவேண்டும். இது போலியாகத் தரப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர் மீது துறை மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்படும்.
5.இவ்விதமாக சரிபார்த்த பின்னர் கோ-ஆப்டெக்ஸில் பதிவு செய்யப்படும் விசைத்தறி சங்கங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு கடனுக்கு நூலோ அல்லது முன்பணமோ வழங்கப்பட மாட்டாது.
6.கோஆப்டெக்ஸில் ஆர்டர் பெற வேண்டும் என்றால் நூலுக்கான தொகையை 100 சதவீதம் செலுத்தி அதன் அடிப்படையில் துணிகள் நெய்து தரலாம்.
7.3 ஆண்டுகளுக்கு நிலுவை இல்லாமல் திறம்பட செயல்படும் விசைத்தறி சங்கங்களுக்கு மட்டுமே நடப்பாண்டில் இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் ஆர்டர்கள் வழங்கப்படும். தொகை நிலுவை இருக்கும் பட்சத்தில் எந்த சங்கங்களுக்கும் இந்த ஆண்டு உத்தரவு வழங்கப்பட மாட்டாது. 8.பொதுவாக பதிவு செய்யப்படும் விசைத்தறி சங்கங்கள் மேற்கூறியவாறு நூல்களை முழுமையாக தொகையை செலுத்திப் பெற்று அதற்கான தொகையை கோஆப்டெக்ஸிற்கு தரப்படவில்லை என்றால் அவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு கறுப்புப் பட்டியலில் வைக்கப்படும். கறுப்புப் பட்டியலில் வைக்கப்படும் எந்தவித சங்கங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கோஆப்டெக்ஸ் எந்த பணிகளையும் வழங்காது. கறுப்புப் பட்டியலில் வைப்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் தான் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது சம்பந்தப்பட்ட விசைத்தறி சங்கங்கள் கோஆப்டெக்ஸில் நூலைப் பெற்று அதற்கான துணிகளைத் தரவில்லை என்றோ அல்லது முன்பணம் பெற்று உரிய நேரத்தில் துணிகளை வழங்கவில்லை என்று தெரிய வந்தாலோ இச்சங்கங்கள் தானாகவே கறுப்புப் பட்டியலுக்குள் கொண்டு செல்லப்படும்.
9.ஏற்கனவே பதிவு செய்து பணி செய்துவரும், சங்கங்களும், நூலையோ அல்லது முன்பணத்தையோ பெற்றுக்கொண்டு உரிய நேரத்தில் துணிகளை தரவில்லை என்றால் இச்சங்கங்களும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கறுப்புப் பட்டியலுக்குள் கொண்டு வரப்படும்.
மேற்கூறிய விதி முறைகளை கோஆப்டெக்ஸில் உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்று இதன் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.