இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை, ஜூலை.13 -பிற்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையினை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு சட்டம் 45 ற 1994 -ல் குறிப்பிட்டுள்ளவாறு 69 சதவீதம் இடஒதுக்கீட்டை தொடர்ந்து கடைபிடிப்பது என்றும், இடஒதுக்கீட்டில் வளமான பிரிவினரை நீக்கப்பட வேண்டியதில்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணை 11.7.2011-ல் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
மண்டல் குழு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் 16.11.1992 அன்று வழங்கிய தீர்ப்பில், மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டினை விஞ்சக் கூடாது என்று ஆணையிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து செயல்படுத்த ஏதுவாக, 1993 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசால், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்களுக்கு (கல்வி நிலையங்களில் இடங்களையும், மாநில அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்ட முன்வடிவு 31.12.1993 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு சட்டமாகியது (தமிழ்நாடு சட்டம் 45/1994). பின்னர் இச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 31ஆன் கீழ் பாதுகாப்பு பெறும் பொருட்டு 1994 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் (76வது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட தமிழ்நாடு சட்டம் 45/1994ன் செல்லும் தன்மையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இப் பேராணை மனு எண்.454/1994 மற்றும் வளமான பிரிவினரை இட ஒதுக்கீட்டிலிருந்து நீக்குதல் குறித்து தாக்கல் செய்யப்பட்ட இப் பேராணை மனு எண்.194/2006 ஆகியவற்றில், உச்ச நீதிமன்றமானது, 69 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் வளமான பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து நீக்குதல் ஆகிய இரண்டு பொருள்கள் பற்றி தமிழ்நாடு அரசு, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையினை பெற்று 12.7.2011க்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென்று முறையே 13.7.2010 மற்றும் 3.1.2011 ஆகிய தேதிகளில் ஆணையிட்டது.
அவ்வாறு பிறப்பித்த ஆணையில், ஒரு மாநிலம் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக இட ஒதுக்கீடு செய்ய முனையும் போது, அதனுடைய ஆணையானது எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களின் அடிப்படையில், அம்மாநிலத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் பிறப்பிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில், எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்கள் அரசால் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டன. மேலும் ஆணையம் கோரிய பல்வேறு விவரங்கள், அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டு ஆணையத்திற்கு அரசால் அனுப்பி வைக்கப்பட்டன. இட ஒதுக்கீட்டின் அளவு மற்றும் வளமான பிரிவினரை நீக்கம் செய்வது ஆகியன குறித்து எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களை ஆய்வு செய்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மேற்காணும் பொருள் குறித்த தனது அறிக்கையினை 8.7.2011 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்தது.
அவ்வறிக்கையில், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு சட்டம் 45/1994 எவ்வித குறைபாடும் இன்றி உள்ளது என்றும், எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 விழுக்காடு, மிகப் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பினருக்கு 20 விழுக்காடு, ஆதி திராவிடர் வகுப்பினருக்கு 18 விழுக்காடு மற்றும் பழங்குடியினருக்கு 1 விழுக்காடு என்று வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் அளவு, மேற்படி வகுப்பினருடைய மக்கட்தொகையைக் கணக்கில் கொள்ளும் போது முற்றிலும் சரியானது என்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், 17 ஆண்டு காலமாக அமலில் இருந்து வரும் தமிழ்நாடு சட்டம் 45/1994ன் அமலாக்கத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டிலிருந்து வளமான பிரிவினரை நீக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த அறிக்கை, தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 11.7.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் 8.7.2011 அன்று தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையினை ஏற்றுக் கொள்வது என்றும், அதன் அடிப்படையில், தமிழ்நாடு சட்டம் 45/1994ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது என்றும், இட ஒதுக்கீட்டில் வளமான பிரிவினரை நீக்கம் செய்ய வேண்டியதில்லை என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு சட்டம் 45/1994ஐ தொடர்ந்து நடைமுறைப் படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணை 11.7.2011 அன்று வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையின்படி, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு, மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினருக்கு 20 விழுக்காடு, ஆதி திராவிட வகுப்பினருக்கு 18 விழுக்காடு, பழங்குடியினருக்கு 1 விழுக்காடு, ஆக மொத்தம், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு, வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 2 days 2 min ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 5 days 4 min ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
-
ஜெப ஆலய தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்
29 Jan 2023ஜெருசலேம் ; ஜெருசலேமில் யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா மாநிலத்தில் நடந்த பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் சுகாதார அமைச்சர் பலி : வெறிச்செயலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை
29 Jan 2023புவனேஸ்வர் : ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்ச
-
வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
29 Jan 2023சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில
-
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Jan 2023சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
-
நவாஸ் மகள் மரியம் ; நாடு திரும்பினார்
29 Jan 2023லாகூர், ஜன.
-
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
29 Jan 2023பராக் ; செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
-
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
29 Jan 2023சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
29 Jan 2023சென்னை : காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு
29 Jan 2023மும்பை : நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
-
முதியோர்களுக்கான உதவி தொகையை நிறுத்தி விட்டது : தி.மு.க. அரசு மீது எடப்பாடி குற்றச்சாட்டு
29 Jan 2023சேலம் : முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
-
ராகுலின் பாதயாத்திரை இன்று நிறைவு: ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள்: 21கட்சிகளுக்கு அழைப்பு
29 Jan 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்
29 Jan 2023கலிபோர்னியா ; 50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
-
2 நாட்களே அவகாசம்: மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டதை சரிபார்ப்பது எப்படி?
29 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் ஆர்வம் : மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
29 Jan 2023புதுடெல்லி : பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என்றும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ள
-
மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் 14 பேர் பலி: ரஷ்யா குற்றச்சாட்டு
29 Jan 2023நொவைடர் ; ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நொவைடர் நகர் மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 14 பேர் பலியானார்கள்.
-
யு-19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை வென்று சாதனை
29 Jan 2023ஜொகனர்ஸ்பெர்க் : 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது.
-
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
29 Jan 2023அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுத தடை : ஆப்கனில் தலிபான்கள் அறிவிப்பு
29 Jan 2023xகாபூல் ; பெண்கள் பல்கலைக் கழக நுழைவு தேர்வை எழுத தடை விதித்து ஆப்கன் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனுதாக்கல் நாளை துவங்குகிறது : வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதி
29 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்செய்யும் பணி நாளை தொடங்குகிறது.
-
ஆஸ்திரேலிய ஓபன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன்
29 Jan 2023சிட்னி : ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
29 Jan 2023மதுரை : ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
-
நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்
29 Jan 2023ஜம்மு ; டெல்லி கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஹூரியத் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 5-ம் தேதி நடக்கிறது
29 Jan 2023வடலூர் : வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ம் தேதி நடக்கிறது.
-
ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்
29 Jan 2023புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவ
-
ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
29 Jan 2023பெர்த் : ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.