எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.28 - ஈழத் தமிழர்கள் இன்னல் தீரவும், ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க கோரியும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா உலக தமிழினத்தின் ஒப்பற்ற தலைவராக மலர்ந்துள்ளார் என்று அ.தி.மு.க. இலக்கிய அணி புகழாரம் சூட்டியுள்ளது.அ.தி.மு.க. இலக்கிய அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணை செயலாளர் நத்தம் கோபு (எ) ரகுராமன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வரவேற்றார். விருதுநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கே.கோபால்சாமி நன்றி கூறினார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன், செயலாளர் தமிழ்மகன் உசேன், அமைப்பு செயலாளர்கள் தளவாய் சுந்தரம், சுலோச்சனா சம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன், பா.வளர்மதி, பொன்னையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக அரசியல் வரலாற்றில் மகத்தான திருப்புமுனையாக வரலாறு காணாத வெற்றியை பெறுவதற்கு தியாக வேள்வியாய் திகழ்ந்த ஜெயலலிதாவுக்கு இலக்கிய அணியின் சார்பில் நன்றியையும், நல்வாழ்த்துக்களையும் பணிவோடு சமர்ப்பிக்கிறது.
நான் தான் தமிழ், தமிழ் தான் நான் என்று தனக்கு தானே தம்பட்டம் அடித்து கொண்டு ஈழத் தமிழர்களை காட்டிக் கொடுத்து, தமிழினத்தை கொன்று குவிக்க காரணமாக இருந்த கருணாநிதியை உலகுக்கு அடையாளம் காட்டி, கருணாநிதியால் வஞ்சிக்கப்பட்டு வாழ்விழந்த ஈழத்தமிழினத்தை கொடியவன் சிங்கள வெறியன் மஹிந்த ராஜபக்ஷேவிடம் காட்டிக் கொடுத்து அதற்கு கைக் கூலியாக தனது குடும்பம் பிழைப்பு நடத்துவதற்கு மத்திய அரசில் பங்கேற்று டெல்லி வாலாக்களின் காலில் விழுந்த தமிழின துரோகி கருணாநிதி தன் கையாலாகாத தனத்தால் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்கவும், இன வெறியன் சிங்கள ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கவும், உலக வல்லரசு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை உலக நல்லரசின் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை செய்ததின் மூலம் உலகத் தமிழர்களின் நலன் காக்கப்பட, தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டதின் மூலம் ஜெயலலிதா உலக தமிழினத்தின் ஒப்பற்ற தலைவராக மலர்ந்து வருகிறார். விரைவில் உலக சமாதானத்திற்கு நோபல் பரிசை பெறுவார் என்பது சத்தியம். அத்தகையை சிறந்த நிகழ்வை எண்ணி, எண்ணி இலக்கிய அணி பூரிப்படைகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் அரசு நிறைவேற்றும் அனைத்து நலத்திட்டங்கள், நாட்டின் வளர்ச்சி குறித்த அனைத்து திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் உள்ளாட்சி மன்றங்கள் பெரும்பங்கு வகிக்கும். எனவே உள்ளாட்சி தேர்தல்களிலும் 100 சதவீத வெற்றி பெற இன்று முதல் அ.தி.மு.க. இலக்கிய அணியின் சார்பாக ஆயுத்த பணிகளை தொடங்கி, கட்சி மகத்தான வெற்றியை பெற்று வெற்றிக் கனியை முதல்வர் ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பது என்று சபதம் ஏற்கிறது.
அ.தி.மு.க. வெற்றி பெற தமிழக மக்களின் துயர் துடைக்க தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ஏழை, எளிய மக்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் தமிழக மக்கள் அனைவருக்கும் சென்றடையும் வகையில் குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் 20 கிலோ அரிசி வழங்க ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் அதை செயல்படுத்தியும் காட்டிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலக்கிய அணி நன்றியை காணிக்கையாக்குகிறது.
அதேபோல் கிராம மக்களுக்கு இலவச ஆடுகள், கறவை மாடுகள், முதியோர் உதவித் தொகை உயர்வு, இலவச சைக்கிள், லேப்- டாப், மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் மற்றும் ஏழை பெண்கள் மணமுடிக்க திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு தங்கம் என பலவேறு திட்டங்களை செயல்படுத்தி தினசரி 20 மணி நேரம் தமிழக மக்களுக்காக உழைத்து ஏழைக்கு தங்கமாய் எதிரிக்கு சிங்கமாய் முதல்வர் திகழ்வதை எண்ணி இலக்கிய அணி இதயபூர்வமான நன்றியினை காணிக்கையாக்குகிறது.
கருணாநிதியின் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி அவரது வாரிசுகள் தி.மு.க.வின் அடாவடி கட்டப் பஞ்சாயத்து கும்பல்களின் மிரட்டல் உருட்டல்களினால் தனது சொத்துக்களை நிலங்களை இழந்து ஆட்சி அதிகாரங்களுக்கு பயந்து ஒதுங்கி நின்ற ஏழை எளிய மக்கள் மற்றும் நில உரிமையாளர்களின் இழந்த சொத்தை மீட்டுத்தர காவல்துறையில் தனிப்பிரிவை துவங்கி நடவடிக்கை எடுத்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலக்கிய அணியினர் பாராட்டுகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அ.தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்ந்த இந்த 2 மாத காலத்தில் முதல்வர் ஜெயலலிதா அரசு நிகழ்த்தியுள்ள வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளையும், வருகிற பட்ஜெட் கூட்ட தொடரில் அ.தி.மு.க. அரசு அறிவித்து செயல்படுத்த உள்ள மக்கள் நலத்திட்டங்கள் சாதனைகளை அடிதட்டு மக்களுக்கு கொண்டு செல்கிற விதமாக தெருமுனை பிரச்சார கூட்டங்கள், ஓரங்க நாடகங்கள், பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று இலக்கிய அணி தீர்மானம் செய்கிறது.
அ.தி.மு.க. இலக்கிய அணி சார்பாக மாவட்ட நிர்வாகிகளை அடையாளம் கண்டு சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக அறிவித்து வெற்றி பெற செய்து அழகு பார்க்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலக்கிய அணி தனது இதயபூர்வமான நன்றியினை காணிக்கையாக்குகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு