முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரகசிய குறியீட்டை பயன்படுத்தி ஏ.டி.எம்.-ல் கொள்ளை

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஆக. 2- டெல்லியில் மங்கள்புரி பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான 14 ஏ.டி.எம்.களில் ரூ. 24 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  இந்த தனியார் வங்கியின் ஊழியர்கள் தீபக்ராணா, பிரதீப் ஆகியோர் தினமும் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பி வந்தனர். ஏ.டி.எம். எந்திரத்தை திறப்பதற்கு ரகசிய குறியீடு ஒன்று உள்ளது. இதை பிரதீப் மட்டுமே அறிந்திருந்தார். ஆனால் இதனை தீபக் ராணாவிடம் கூறியிருந்தார். இதையடுத்து தீபக்ராணா ரகசிய குறியீட்டை பயன்படுத்தி கொள்ளையடிக்க முடிவு செய்தார். இதற்காக அவர் தனியாக ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று ரூ. 24 லட்சத்தை கொள்ளையடித்தார். ஏ.டி.எம். எந்திரங்களை கண்காணிக்கும் ஊழியர்கள் சென்று பார்த்த போது 6 எந்திரங்கள் செயல்படாமல் இருந்தன. உயரதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்த போது பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. தீபக்ராணா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்