முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி உறுதி

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக.7 - மதுரை மாவட்டத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றிபெற செய்ய அயராது பாடுபட வேண்டும் என ஜெயலலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உறுதி ஏற்றனர். 

புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட பேரவை தலைவர் உசிலை பிரேமானந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்தோர் அனைவரையும் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் கே.தமிழரசன் எம்.எல்.ஏ., வரவேற்று பேசினார். கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் எம்.முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.,கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட பகுதிகளில் நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா அடையாளம் காட்டக்கூடிய அ.தி.மு.க. வேட்பாளர்களை அமோக வெற்றிபெறச்செய்வது அந்த வெற்றிக்கு இன்று முதல் அயராது பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை நிர்வாகிகள் உறுதி ஏற்றனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் புறநகர் மாவட்ட பேரவை நிர்வாகிகள் அய்யர் பங்களா கருப்பணன், வழக்கறிஞர் முனியாண்டி, எம்.ஓ.ஷாகுல் ஹமீது, திருப்பரங்குன்றம் ராஜா பட்டர், எம்.எ.பாலு, வேலு ராமகிருஷ்ணன், வக்கீல் சேகர், ஒன்றிய பேரவை செயலாளர்கள் என்.கே.பாலகிருஷ்ணன், வக்கீல் முனியாண்டி, ராமன், ஜெயராமன், வெள்ளைச்சாமி, உசிலை பெருமாள், தங்கராஜ் மற்றும் திருமங்கலம், அவனியாபுரம் கண்ணுசாமி, மலையாளம், வாடிப்பட்டி தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிழக்கு ஒன்றிய பேரவை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்