எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,மார்ச்.- 6 - தொலைதொடர்புத்துறை முன்னாஏள் மத்திய மந்திரி ராசா மீது பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆ.ராசா மத்திய மந்திரியாக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதலில் வந்தவருக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதிலும் பல தில்லுமுல்லுகள் நடைபெற்றது தெரிய வந்தது. விண்ணப்பத்திற்கான கடைசி தேதி திடீரென்று மாற்றப்பட்டது. தகுதியற்ற சில நிறுவனங்கள் உரிமம் பெற்றன. பல வங்கிகளும் இதற்கு உடந்தையாக செயல்பட்டன. அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமாக அரசுக்கு அதிகப்பட்சமாக ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தலைமை கணக்கு அதிகாரி வினோத் ராய் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலைவரிசை ஊழல் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவும் இதனை விசாரித்து வருகிறது. அலைவரிசை ஊழல் குறித்து விசாரணை நடத்த மூத்த காங்கிரஸ் தலைவர் பி.சி. சாக்கோ தலைமையில் 30 எம்.பி.க்கள் அடங்கிய பாராளுமன்ற கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா, தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகூரா, ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியலிட்டீஸ் அதிபர் சாகித் உஷ்மான் பல்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். எடிசலாட் டிபி, யுனிடெக் ஆகிய நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. தனது கூர்மையான பார்வையை பதித்துள்ளது. எடிசலாட் நிறுவனத்திற்கு பல்வா அதிபர் என்று கூறப்பட்டாலும் இதற்கு பின்னணியில் வேறுபல பெரும் பல பெரும் புள்ளிகள் உள்ளனர் என்று கூறப்படுகிறது. யூனிநார் நிறுவனம் நார்வே நாட்டுடன் தொடர்புடையது. லூர் நிறுவனம் எஸ்.ஆர். குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஒரு போலி நிறுவனம் என்று தெரியவந்துள்ளது. பல பகை நாடுகளின் பின்னணியில் பல தொலைபேசி நிறுவனங்களுக்கு தொடர்பு உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இந்த நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பது சி.பி.ஐ.யின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சி.பி.ஐ. மற்றும் அமுலாக்க பிரிவு அதிகாரிகள் அலைவரிசை தொடர்பான விவகாரங்களை புலனாய்வு செய்ய தீவிரம் கொண்டுள்ளன. இதுவரை 63 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணை தொலைபேசி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் மட்டுமல்லாமல் சில எம்.பி.க்களும் அடங்குவர். 70 சதவீத புலனாய்வு பணி நிறைவு பெற்றதால் இம்மாதம் 31-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
பகை நாடுகளின் பங்கு இந்த அலைவரிசை ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால் ஆ.ராசா மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூர்மையாக பரிசீலனை செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராசா தெரிந்தேதான் இந்த நிறுவனங்களுக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக அவர் ரூ. 3 ஆயிரம் கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. புலனாய்வு வாயிலாக கண்டறிந்துள்ளது. இந்த பணம் உள்நாட்டில் மட்டுமல்லாது 10-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இதுகுறித்து அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த நாடுகளும் ஒத்துழைப்பு அளிப்பதாக பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். இன்னும் சில நாட்களில் மேலும் சில பெரும் புள்ளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.ஐ.வட்டாரம் தெரிவிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
14 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம
-
அரசுக்கு எதிராக போராட்டம்: மடகாஸ்கர் அதிபர் தப்பி ஓட்டம்
14 Oct 2025அண்டனானரீவோ, மடகாஸ்கரில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் அதிபர் தப்பி ஓடினார்.
-
மாநில திட்டக் குழுவின் 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
14 Oct 2025சென்னை : மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
-
ரூ.95 ஆயிரத்தை நெருங்கிய ஒரு பவுன் தங்கம் விலை : ஒரேநாளில் ரூ.1,960 உயர்வு
14 Oct 2025சென்னை : 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்.14) பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து மீண்டும் அதிர்ச்சியளித்துள்ளது.
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
14 Oct 2025புதுடெல்லி : டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
அண்டை நாடுகளுடனும் மகிழ்ச்சியாக உள்ளோம்: ஆப்கன் அமைச்சர் பேச்சு
14 Oct 2025புதுடெல்லி, பாகிஸ்தானை தவிர அண்டை நாடுகளுடனும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தகி பேசினார்.
-
ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம்: கூகுள் நிறுவனம் தகவல்
14 Oct 2025விசாகப்பட்டினம், ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம் அமைக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து
14 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
தமிழக 'மா' விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
14 Oct 2025சென்னை : நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யவும், மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை தேவை என்று ப
-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இருப்பு
14 Oct 2025சென்னை : சென்னை குடிநீர் வழங்கும் ஏரியில் போதிய நீர் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டப்பேரவைியல் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று ஆரம்பம் : முதல் நாளில் இரங்கல் தீர்மானம் - அவை ஒத்திவைப்பு
14 Oct 2025சென்னை : தமிழ்நாடு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுவுள்ளது.
-
மகாராஷ்டிராவில் 60 மாவோயிஸ்டுகள் சரண்
14 Oct 2025மும்பை : மகராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தளபதி உள்பட 60 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
-
ராணாவுக்கு கம்பீர் ஆதரவு
14 Oct 2025சமீபத்தில் ஆசிய கோப்பை 2025 தொடரில் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்திய போதிலும் (54 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை) அவர் இரண்டு அணியிலும் ஹர்ஷித் ராணா தேர்வு செய்ய
-
மகாராஸ்டிராவிற்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி சீன பட்டாசுகள் பறிமுதல்
14 Oct 2025மும்பை : மராட்டியத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடப்படும் விளம்பரத்திற்கு சான்றிதழ் பெறுவது கட்டாயம்
14 Oct 2025பீகார், பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரத்திற்கு சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இருப்பு
14 Oct 2025சென்னை, சென்னை குடிநீர் வழங்கும் ஏரியில் போதிய நீர் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
14 Oct 2025புதுடெல்லி : மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது.
அருண்ஜெட்லி...
-
பாலஸ்தீன தனி நாடு பற்றி கேள்வி: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதில்
14 Oct 2025வாஷிங்டன் : பாலஸ்தீன தனி நாடு பற்றிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.
-
சீனாவில் பள்ளிகளில் இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்
14 Oct 2025ஷாங்காய் : சீனாவில் பள்ளிகளில் இந்தி பாடம் கற்பித்தல் தொடங்கப்பட்டது.
-
அ.தி.மு.க. 54-வது ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்
14 Oct 2025சென்னை : அ.தி.மு.க.
-
பி.எப். ஓய்வூதியத்தை உயர்த்துவது அமைச்சரவை பரிசீலனை: மத்திய அமைச்சர் தவல்
14 Oct 2025புதுடெல்லி, பி.எப். ஓய்வூதியத்தை உயர்த்துவது அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளது என்று மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வாளர்கள் தகவல்
14 Oct 2025சென்னை, ஒரு வாரத்துக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு நேற்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை
-
ஐ.பி.எஸ். அதிகாரி தற்கொலை வழக்கில் ராகுல் காந்தி காட்டம்
14 Oct 2025சண்டிகர், ஐ.பி.எஸ். அதிகாரி புரன் குமாரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல் கூறினார் .
-
இந்திய வீராங்கனை ‘சாம்பியன்’
14 Oct 2025ஜப்பான் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அங்குள்ள யோகோஹமாவில் நடந்தது.