எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,மார்ச்.- 6 - தொலைதொடர்புத்துறை முன்னாஏள் மத்திய மந்திரி ராசா மீது பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆ.ராசா மத்திய மந்திரியாக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதலில் வந்தவருக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதிலும் பல தில்லுமுல்லுகள் நடைபெற்றது தெரிய வந்தது. விண்ணப்பத்திற்கான கடைசி தேதி திடீரென்று மாற்றப்பட்டது. தகுதியற்ற சில நிறுவனங்கள் உரிமம் பெற்றன. பல வங்கிகளும் இதற்கு உடந்தையாக செயல்பட்டன. அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமாக அரசுக்கு அதிகப்பட்சமாக ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தலைமை கணக்கு அதிகாரி வினோத் ராய் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலைவரிசை ஊழல் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவும் இதனை விசாரித்து வருகிறது. அலைவரிசை ஊழல் குறித்து விசாரணை நடத்த மூத்த காங்கிரஸ் தலைவர் பி.சி. சாக்கோ தலைமையில் 30 எம்.பி.க்கள் அடங்கிய பாராளுமன்ற கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா, தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகூரா, ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியலிட்டீஸ் அதிபர் சாகித் உஷ்மான் பல்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். எடிசலாட் டிபி, யுனிடெக் ஆகிய நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. தனது கூர்மையான பார்வையை பதித்துள்ளது. எடிசலாட் நிறுவனத்திற்கு பல்வா அதிபர் என்று கூறப்பட்டாலும் இதற்கு பின்னணியில் வேறுபல பெரும் பல பெரும் புள்ளிகள் உள்ளனர் என்று கூறப்படுகிறது. யூனிநார் நிறுவனம் நார்வே நாட்டுடன் தொடர்புடையது. லூர் நிறுவனம் எஸ்.ஆர். குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஒரு போலி நிறுவனம் என்று தெரியவந்துள்ளது. பல பகை நாடுகளின் பின்னணியில் பல தொலைபேசி நிறுவனங்களுக்கு தொடர்பு உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இந்த நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பது சி.பி.ஐ.யின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சி.பி.ஐ. மற்றும் அமுலாக்க பிரிவு அதிகாரிகள் அலைவரிசை தொடர்பான விவகாரங்களை புலனாய்வு செய்ய தீவிரம் கொண்டுள்ளன. இதுவரை 63 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணை தொலைபேசி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் மட்டுமல்லாமல் சில எம்.பி.க்களும் அடங்குவர். 70 சதவீத புலனாய்வு பணி நிறைவு பெற்றதால் இம்மாதம் 31-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
பகை நாடுகளின் பங்கு இந்த அலைவரிசை ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால் ஆ.ராசா மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூர்மையாக பரிசீலனை செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராசா தெரிந்தேதான் இந்த நிறுவனங்களுக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக அவர் ரூ. 3 ஆயிரம் கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. புலனாய்வு வாயிலாக கண்டறிந்துள்ளது. இந்த பணம் உள்நாட்டில் மட்டுமல்லாது 10-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இதுகுறித்து அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த நாடுகளும் ஒத்துழைப்பு அளிப்பதாக பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். இன்னும் சில நாட்களில் மேலும் சில பெரும் புள்ளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.ஐ.வட்டாரம் தெரிவிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 13 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025