முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்வையற்ற மாணவ - மாணவியருக்கு ரொக்கப் பரிசு

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.8 - பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்த விபரம் வருமாறு:-  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (7.9.2011) தலைமைச் செயலகத்தில், 2010 - 2011 ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12​ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று நிலைகளில் மதிப்பெண் பெற்ற பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். 

2010 -  2011 ஆம் கல்வியாண்டில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10​ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற ஜெ. விக்னேஷ்​க்கு 12,000 ரூபாய் ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பெற்ற மாணவர் ஜி. பிலிக்ஸ்​க்கு 9,000 ரூபாய் ரொக்கப் பரிசும், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் பி. ராஜசேகர், எஸ். நந்தீஷ், பி. சசிகுமார் ஆகியோருக்கு தலா 6,000 ரூபாய் ரொக்கப் பரிசும் மற்றும் 12​ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் ஆர். ஜெயபிரகாஷ்​க்கு 18,000 ரூபாய் ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பெற்ற மாணவர் ஆர். சரவணனுக்கு 12,000 ரூபாய் ரொக்கப் பரிசும், மூன்றாம் இடம் பெற்ற மாணவர் எஸ்.கிருஷ்ணகுமாருக்கு 9,000 ரூபாய் ரொக்கப் பரிசுகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கி, கல்வியில் சிறந்த முறையில் முன்னேறி எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாக உயர்ந்து வாழ்வில் நலன்கள் பல பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில்,  சமூகநலத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நல மாநில ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்