எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.10 - ஒலிம்பிக் துப்பாக்கிசுடும்போட்டியில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழக போலீசாருக்கு அதி நவீன துப்பாக்கிகள் வாங்க நிதி ஒதுக்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அகில இந்திய அளவிலான 11வது போலீஸ் துப்பாக்கிசுடும் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளித்து முதல்அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:
1991ம் ஆண்டு சென்னையில் அகில இந்திய போலீஸ் பணித்திறன் போட்டி நடந்தபோது நான் புதிதாக ஒரு பரிசுகோப்பையை ஏற்படுத்திய நிகழ்ச்சியை நினைவு கூறுகிறேன். அப்போது தமிழ்நாடு போலீஸ் துப்பாக்கி சுடும் பிரிவுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கினேன். 2000, 2004, 2009 ஆண்டுகளில் தமிழக போலீஸ் அணி துப்பாக்கிசுடும் போட்டியில் பரிசு கோப்பையை பெற்றதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
தற்போது மீண்டும் அந்தகோப்பையை தமிழ்நாடு பெற்றிருப்பதை எண்ணி மேலும் மகிழ்கிறேன். 1991ம்ஆண்டு நான் முதல் அமைச்சராக பொறுப்பேற்றபோது தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் தடுக்க போதுமான ஆயுதங்கள் இல்லாமல் தமிழக போலீஸ் இருந்ததை உணர்ந்தேன்.
அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்கப்படவேண்டிய 2ம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளே போலீசாரிடம் இருந்தன. ஆனால் அதே நேரத்தில் தீவிரவாதிகள் அதி நவீன ஆயுதங்களை வைத்திருந்தனர். அப்போது நான் டெல்லி சென்றநேரத்தில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், உள்துறை மந்திரி எஸ்.பி.சவான், நிதி அமைச்சர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்து தமிழக போலீஸ் துறையை நவீனப்படுத்த குறைந்தபட்சம் ரூ.30 கோடியாவது நிதி ஒதுக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தேன்.
மத்திய அரசு கொஞ்சம் நிதி கொடுத்தது. அதைவைத்து ஓரளவுக்கு போலீஸ் துறையை நவீனப்படுத்தினேன்.
போலீசாருக்கு ஏ.கே.47 உள்ளிட்ட நவீன துப்பாக்கிகள், நவீன தொலை தொடர்பு சாதனங்கள், நவீன வாகனங்கள் வாங்கப்பட்டன.
இவ்வாறு தமிழக போலீஸ்துறை நவீனமாக்கப்பட்டதை பார்த்து இதர மாநிலத்தினரும் தங்கள்போலீஸ் துறையை நவீனப்படுத்த நிதி கேட்க ஆரம்பித்தன.இவ்வாறு போலீஸ்துறையை நவீனமாக்கும் திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தது தமிழகம்தான்.
போலீஸ்துறையை நவீனமாக்குவதற்கு வித்திட்டது நான் தான் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.
நவீன ஆயதங்களை வாங்குவதுடன் எல்லாம் முடிந்துவிடாது.அத்தகைய நவீன ஆயுதங்களை திறமையாக கையாளுவதுதான் முக்கியம். துப்பாக்கியை கையாளுவது சாதாரண விஷயம் அல்ல. அது நுட்பமான செயலாகும். தீவிரவாதிகளை போலீசார் குறிபார்த்து நுட்பமாக சுட்டு அப்பாவி மக்களை எவ்வித ஆபத்தும் இல்லாமல் பாதுகாத்திடவேண்டும். பிணைக்கைதிகளாக தீவிரவாதிகள் சிலரை பிடித்துவைத்திருக்கும் சூழ்நிலையில், போலீசார் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தக்கூடாது. அதுபோன்ற நேரத்தில் பிணைக்கைதிகளையும், அப்பாவி மக்களையும் வேறுபடுத்தி பார்க்க தெரியவேண்டும். அந்தநேரத்தில் ஒரு வினாடியில் போலீசார் எடுக்கும் முடிவு அப்பாவி மக்களின் வாழ்க்கையையும் மரணத்தையும் முடிவு செய்யும்.
இந்த ஆண்டு துப்பாக்கிசுடும் போட்டியில் 9 பெண் போலீசார் கலந்து கொண்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் 1992ம்ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நான் தான் முதல் முதலாக தொடங்கினேன்.
அதைப்போல முதல் முதலாக பெண் கமோண்டோ போலீஸ் பிரிவை தொடங்க உத்தரவிட்டதும் நான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
போலீசாரின் வாழ்க்கை ரோஜா மலர்கள் நிறைந்த படுக்கை அல்ல. காலையில் பணிக்காக வெளியே செல்லும்போலீசார் இரவில் வீடு திரும்புவார்களா என்பது உத்தரவாதம் கிடையாது. ஏதாவது தீவிரவாதிகள் தாக்குதல் என்றால் போலீசாரின் நிலைமைப்பற்றி சொல்லத்தேவையில்லை.
சாலையில் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் போலீசார் வாகனங்கள்மோதி பலியாகி தன் குடும்பத்தினரை தவிக்கவிட்டு செல்லும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
ராணுவத்தினரும் போலீசாரும் நாட்டுமக்களை பாதுகாக்கும் பாதுகாவலர்கள். வசதிகளும், ஊக்கமும் அளிக்கப்பட்டால் தமிழக போலீசார் உலகில் உள்ள எந்த சிறந்த போலீசாருக்கும் இணையாக செயல்படுவார்கள்.
ஆயுதங்களை போலீசார் கையாளும் திறனை பரிசோதிப்பதற்காக இத்ததைய துப்பாக்கி சுடும்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதேபோல 2007ம் ஆண்டில் இருந்து அகில இந்திய போலீஸ் விளையாட்டு துப்பாக்கிசுடும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இது ஒலிம்பிக்கில் நடத்தப்படும் துப்பாக்கி சுடும் போட்டியை போன்றதாகும். இதற்கு .177 அல்லது .22 பிஸ்டல்கள், துப்பாக்கிகள் தேவை. ஆனால் இதெல்லாம் தமிழ்நாடு போலீசில் இல்லை. எனவே தமிழக போலீசார் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும்போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறும் வகையில் இத்தகைய நவீன துப்பாக்கிகள் வாங்க தேவையான நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளேன். அதன் மூலம் துப்பாக்கி சுடும் திறனை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
இவ்வாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு