எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராய்ப்பூர், அக்.- 24 - கர்நாடகத்திற்கு அத்வானியின் ரத யாத்திரை செல்லாது என்று அனுமானங்கள் நிலவிவரும் வேளையில் தனது ரத யாத்திரை திட்டமிட்டபடி பெங்களூரு செல்லும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக 38 நாள் ரத யாத்திரையை பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மேற்கொண்டு வருகிறார். இவர் இம்மாதம் 30 ம்தேதி பெங்களூரு செல்வதாக திட்டமிடப்பட்டுள்ளது. அன்று பெங்களூருவில் நடக்கும் ஒரு பேரணியில் கலந்துகொண்டு பேசுவதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த பேரணி, பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கர்நாடக பா.ஜ.க. வட்டாரங்கள் கூறியுள்ளன. என்றாலும் அத்வானியின் ரத யாத்திரை அக்டோபர் 31 ம் தேதி கர்நாடக கடலோர பகுதிகளான மங்களூர், உடுப்பி போன்ற இடங்களில் தொடரும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. கர்நாடகத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்பட்டுள்ளதால் அத்வானியின் ரதயாத்திரை கர்நாடகத்திற்கு செல்லாது என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராய்ப்பூரில் அத்வானியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு திட்டமிட்டபடி தனது யாத்திரை கர்நாடகத்திற்கு செல்லும் என்றும், பெங்களூருக்கும் தனது ரத யாத்திரை செல்லும் என்றும் கூறினார். எடியூரப்பா குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அத்வானி, தான் எடியூரப்பாவைப் பற்றி நாக்பூரில் என்ன கூறினேனோ அதே கருத்தில்தான் தான் தொடர்ந்து இருப்பதாகவும், மாறுபட்ட கருத்து எதையும் தாம் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அத்வானி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


