எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.25 - 1.94 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்கும் ஒரே முதல்வர் ஜெயலலிதா தான் என்று அமைச்சர் காமராஜ் கூறினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி நெல் கொள்முதல், பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகிய விவசாயிகள் நலன் காக்கும், ஏழை எளிய மக்களின் பசிப் பிணியைப் போக்கிடும் திட்டங்களின் செயல்பாடு குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் சென்னை மண்டல அலுவலகத்தில் நேற்று தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் இரா. காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலர் டி.என் இராமநாதன், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கா.பாலசந்திரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் முனைவர். தா. கார்த்திகேயன், அனைத்து மாவட்ட மண்டல மேலாளர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உணவுத் துறை அமைச்சர் தனது உரையில், தமிழக முதல்வர் 6 நாட்கள் முன்னதாக 6.6.11 அன்றே மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டதன் பயனாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கீழ்க்காணும் விதத்தில் பலனடைந்துள்ளனர்.
முன்னதாகவே பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நடவு, சாகுபடி பணிகள் முன்னதாகவே நடைபெற்றன.
இந்த வருட மகசூல் இரட்டிப்பானதில் விவசாயிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறார்கள்.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே அறுவடை பணிகள் நிறைவு பெற்றன. இருப்பினும், ஒரு சில இடங்களில் மழை பெய்ததால் 17 சதவீதம் முதல் 20 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதின் பலனாக விவசாயிகள், நேரடி கொள்முதல் நிலையங்களில் தங்கள் நெல்லை விற்று பயனடைந்தனர்.
அதிக மகசூல் தரக்கூடிய 9 வகை நெல் 1.13 லட்சம் மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50ம், சன்ன ரக நெல்லுக்கு ரூ. 70ம் வழங்கி ரூ.24.32 கோடி விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டதால் விவசாயிகள் இடைத்தரகர்கள், வியாபாரிகளை நாடிச் செல்லவில்லை.
ஒரு போக சாகுபடி மட்டுமே செய்து வந்த விவசாயிகள் தற்போது இருபோக சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சாதனையாக நடப்பு குருவைப் பருவத்தில் 4.94 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 30.11.11க்குள் இக்கொள்முதல் 5 லட்சம் மெ.டன்னைக் கடந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை முதல்வர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குகிறார்கள். கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மண்டல மேலாளர்களும் இனிவரும் காலங்களில் இப்பணி தொய்வின்றி சிறப்பாக அமைய அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பொது விநியோகத் திட்ட ஆய்வு குறித்துப்பேசிய அமைச்சர் மாதம் ஒன்றுக்கு 3.21 லட்சம் மெ.டன் விலையில்லா அரிசி தமிழ்நாட்டிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. முல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புக் காவல் துறையினர் ஆகியோர் எடுத்த கடுமையான நடவடிக்கையின் காரணமாக ஜூன் 11 ம் மாதத்தில் 3.46 இலட்சம் மெ.டன்னாக இருந்த அரிசி நுகர்வு அக்டோபர் 11ல் 3.21 இலட்சம் மெ.டன்னாக குறைந்துள்ளது. இருப்பினும் 26.9.11 அன்று சேலம் மாவட்ட அரிசி விநியோக கிடங்கிலிருந்து 30 மெ.டன் அரிசி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எடை குறைவின்றியும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதுடன், போலி பட்டியல்கள் தயார் செய்தல், இத்திட்டத்திற்கென வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றைக் கடத்துவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர்கள், போலி குடும்ப அட்டைகளைக் களைவதில் முனைப்புடன் செயல்படுவதுடன், அத்தியாவசியப் பொருட்கள் கைப்பற்றுகை இனங்களில் முன்னேற்றம் காணப்பட வேண்டுமென அறிவுறுத்தினார். இந்திய துணைக் கண்டத்திலேயே விலையில்லா அரிசி தந்து 1.94 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்குகின்ற ஒரே மாநிலம் ஜெயலலிதா ஆளுகின்ற தமிழகம் மட்டும்தான். எனவே இத்திட்டத்தினை செம்மையாக நிறைவேற்றி முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் இயங்குகின்ற உணவுத்துறை சிறப்பாக செயல்பட அனைத்து அலுவலர்களும் அயராது பாடுபட வேண்டுமென அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
தகவல் பரிமாற்றத்திற்கென அரியலூர் மாவட்ட வழங்கல் அலுவலர், ஆத்தூர், தண்டராம்பட்டு, குறிஞ்சிப்பாடி, திருவெறும்nullர், குத்தாலம், கடவூர், மடத்துக்குளம், ஆம்nullர் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு கைபேசி, சிம்கார்டு ஆகியவை உணவுத்துறை அமைச்சர் காமராஜால் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு