இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை, நவ.25 - 1.94 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்கும் ஒரே முதல்வர் ஜெயலலிதா தான் என்று அமைச்சர் காமராஜ் கூறினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி நெல் கொள்முதல், பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகிய விவசாயிகள் நலன் காக்கும், ஏழை எளிய மக்களின் பசிப் பிணியைப் போக்கிடும் திட்டங்களின் செயல்பாடு குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் சென்னை மண்டல அலுவலகத்தில் நேற்று தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் இரா. காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலர் டி.என் இராமநாதன், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கா.பாலசந்திரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் முனைவர். தா. கார்த்திகேயன், அனைத்து மாவட்ட மண்டல மேலாளர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உணவுத் துறை அமைச்சர் தனது உரையில், தமிழக முதல்வர் 6 நாட்கள் முன்னதாக 6.6.11 அன்றே மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டதன் பயனாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கீழ்க்காணும் விதத்தில் பலனடைந்துள்ளனர்.
முன்னதாகவே பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நடவு, சாகுபடி பணிகள் முன்னதாகவே நடைபெற்றன.
இந்த வருட மகசூல் இரட்டிப்பானதில் விவசாயிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறார்கள்.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே அறுவடை பணிகள் நிறைவு பெற்றன. இருப்பினும், ஒரு சில இடங்களில் மழை பெய்ததால் 17 சதவீதம் முதல் 20 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதின் பலனாக விவசாயிகள், நேரடி கொள்முதல் நிலையங்களில் தங்கள் நெல்லை விற்று பயனடைந்தனர்.
அதிக மகசூல் தரக்கூடிய 9 வகை நெல் 1.13 லட்சம் மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50ம், சன்ன ரக நெல்லுக்கு ரூ. 70ம் வழங்கி ரூ.24.32 கோடி விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டதால் விவசாயிகள் இடைத்தரகர்கள், வியாபாரிகளை நாடிச் செல்லவில்லை.
ஒரு போக சாகுபடி மட்டுமே செய்து வந்த விவசாயிகள் தற்போது இருபோக சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சாதனையாக நடப்பு குருவைப் பருவத்தில் 4.94 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 30.11.11க்குள் இக்கொள்முதல் 5 லட்சம் மெ.டன்னைக் கடந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை முதல்வர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குகிறார்கள். கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மண்டல மேலாளர்களும் இனிவரும் காலங்களில் இப்பணி தொய்வின்றி சிறப்பாக அமைய அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பொது விநியோகத் திட்ட ஆய்வு குறித்துப்பேசிய அமைச்சர் மாதம் ஒன்றுக்கு 3.21 லட்சம் மெ.டன் விலையில்லா அரிசி தமிழ்நாட்டிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. முல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புக் காவல் துறையினர் ஆகியோர் எடுத்த கடுமையான நடவடிக்கையின் காரணமாக ஜூன் 11 ம் மாதத்தில் 3.46 இலட்சம் மெ.டன்னாக இருந்த அரிசி நுகர்வு அக்டோபர் 11ல் 3.21 இலட்சம் மெ.டன்னாக குறைந்துள்ளது. இருப்பினும் 26.9.11 அன்று சேலம் மாவட்ட அரிசி விநியோக கிடங்கிலிருந்து 30 மெ.டன் அரிசி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எடை குறைவின்றியும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதுடன், போலி பட்டியல்கள் தயார் செய்தல், இத்திட்டத்திற்கென வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றைக் கடத்துவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர்கள், போலி குடும்ப அட்டைகளைக் களைவதில் முனைப்புடன் செயல்படுவதுடன், அத்தியாவசியப் பொருட்கள் கைப்பற்றுகை இனங்களில் முன்னேற்றம் காணப்பட வேண்டுமென அறிவுறுத்தினார். இந்திய துணைக் கண்டத்திலேயே விலையில்லா அரிசி தந்து 1.94 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்குகின்ற ஒரே மாநிலம் ஜெயலலிதா ஆளுகின்ற தமிழகம் மட்டும்தான். எனவே இத்திட்டத்தினை செம்மையாக நிறைவேற்றி முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் இயங்குகின்ற உணவுத்துறை சிறப்பாக செயல்பட அனைத்து அலுவலர்களும் அயராது பாடுபட வேண்டுமென அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
தகவல் பரிமாற்றத்திற்கென அரியலூர் மாவட்ட வழங்கல் அலுவலர், ஆத்தூர், தண்டராம்பட்டு, குறிஞ்சிப்பாடி, திருவெறும்nullர், குத்தாலம், கடவூர், மடத்துக்குளம், ஆம்nullர் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு கைபேசி, சிம்கார்டு ஆகியவை உணவுத்துறை அமைச்சர் காமராஜால் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 day 6 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 4 days 6 hours ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-29-01-2023
29 Jan 2023 -
ஜெப ஆலய தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்
29 Jan 2023ஜெருசலேம் ; ஜெருசலேமில் யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
29 Jan 2023சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
29 Jan 2023சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில
-
நவாஸ் மகள் மரியம் ; நாடு திரும்பினார்
29 Jan 2023லாகூர், ஜன.
-
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
29 Jan 2023பராக் ; செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
-
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுத தடை : ஆப்கனில் தலிபான்கள் அறிவிப்பு
29 Jan 2023xகாபூல் ; பெண்கள் பல்கலைக் கழக நுழைவு தேர்வை எழுத தடை விதித்து ஆப்கன் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு
29 Jan 2023மும்பை : நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
-
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்
29 Jan 2023கலிபோர்னியா ; 50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
-
காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
29 Jan 2023சென்னை : காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ராகுலின் பாதயாத்திரை இன்று நிறைவு: ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள்: 21கட்சிகளுக்கு அழைப்பு
29 Jan 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
2 நாட்களே அவகாசம்: மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டதை சரிபார்ப்பது எப்படி?
29 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் 14 பேர் பலி: ரஷ்யா குற்றச்சாட்டு
29 Jan 2023நொவைடர் ; ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நொவைடர் நகர் மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 14 பேர் பலியானார்கள்.
-
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Jan 2023சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
-
முதியோர்களுக்கான உதவி தொகையை நிறுத்தி விட்டது : தி.மு.க. அரசு மீது எடப்பாடி குற்றச்சாட்டு
29 Jan 2023சேலம் : முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
-
நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்
29 Jan 2023ஜம்மு ; டெல்லி கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஹூரியத் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
குடியரசு தினத்தின் நிறைவாக டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி
29 Jan 2023புதுடெல்லி : குடியரசு தினத்தின் நிறைவாக, டெல்லியில் நேற்று முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடந்தது.
-
திரிபுரா சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்., பா.ஜ.க,
29 Jan 2023அகர்தலா : திரிபுரா சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
-
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு புனே ; நான் அமைச்சராவேன் என்று ஒருபோதும் கனவு கூட கண்டதில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். மகராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய வெளி
29 Jan 2023அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் ஆர்வம் : மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
29 Jan 2023புதுடெல்லி : பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என்றும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ள
-
ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்
29 Jan 2023புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவ
-
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 5-ம் தேதி நடக்கிறது
29 Jan 2023வடலூர் : வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ம் தேதி நடக்கிறது.
-
இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா: குஜராத்தில் ஒருவர் பலி
29 Jan 2023புது டெல்லி ; இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
இளவரசி டயானாவின் ஆடை ரூ. 4.9 கோடிக்கு விற்பனை
29 Jan 2023நியூயார்க் ; சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகியுள்ளது.
-
ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் : ம.பி. முதல்வர் அறிவிப்பு
29 Jan 2023போபால் : பொருளாதார ரீதியில் ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்