எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூன்.13 - சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே உள்ள நிலத்தை மெட்ரோ ரெயில் பணிக்காக ஒப்படைக்கவேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓட்டல் நிர்வாகம் உட்பட பலர் தொடர்ந்த அப்பீல் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே உள்ள நிலங்களை, பொது மக்கள் சேவைக்காக ராஜா சர் ராமசாமி முதலியார் அறக்கட்டளைக்கு 1888-ம் ஆண்டு அரசு வழங்கியது. வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் இலவசமாக தங்கி செல்வதற்காக இந்த நிலம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், நாளடைவில் இந்த நிலத்தில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டு, ஓட்டல் உள்ளிட்ட பல தொழில்கள் நடக்கத் தொடங்கியது. இதற்கிடையில், இந்த அறக்கட்டளை பெயரில் இருந்த இந்த சொத்துக்கள் அனைத்தும், ஐகோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், இந்த நிலத்தை மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து, தமிழக வருவாய் துறை முதன்மை செயலாளர் கடந்த -2013-ம் ஆண்டு செப்டம்பர் 28- -ந் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டார்.
இந்த அரசாணையின் அடிப்படையில், இந்த இடங்களில் குத்தகை மற்றும் வாடகை இருப்பவர்களை நிலத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறும்படி சென்னை கலெக்டர் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அங்கு கடைகள் நடத்தி வருபவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அங்கு ஓட்டல் நடத்தி வரும் புஹாரி அண்டு சன்ஸ் நிறுவனம் உட்பட பலர் பேர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
இந்த அப்பீல் மனுவை நீதிபதிகள் வி.தனபாலன், எஸ்.துரைசாமி ஆகியோர் விசாரித்து 202 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நேற்று மாலை பிறப்பித்தனர். அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-
சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே உள்ள நிலம், தற்போது ஐகோர்ட்டு நிர்வாகத்துக்கு கீழ் செயல்படும் (ஐகோர்ட்டு) சொத்தாட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்றால், தமிழக அரசு சிவில் கோர்ட்டில்தான் வழக்கு தொடர்ந்து இருக்கவேண்டும்.
ஆனால், அதற்கு மாறாக சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு ஒரு அரசாணையின் மூலம் இந்த நிலத்தை ஆர்ஜிதம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலத்தை ஆர்ஜிதம் செய்வது தொடர்பாக அரசு அதிகாரிகள் சட்டத்தை பின்பற்றி நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அவர்கள், சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளனர்.
அதிகாரிகளின் செயல்களை பார்க்கும்போது, ஒரு அரசாணையின் மூலம், அந்த நிலத்தை உள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது. அதேநேரம், மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக இந்த நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்வது தொடர்ப்õக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு இந்த ஐகோர்ட்டு கட்டுப்பட்டது என்பதால், இந்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்யவேண்டிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலம் சென்னை மக்களின் நலன் உள்ளடங்கிய மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக அரசு ஆர்ஜிதம் செய்துள்ளதாலும், அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மதிப்பு அளித்தும், கனத்த இதயத்துடன் இந்த அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம், இந்த நிலத்தை ஆர்ஜிதம் செய்ய அரசின் நிர்வாக நடவடிக்கையை சட்டப்படி இல்லை என்ற கருத்தையும் நாங்கள் பதிவு செய்கிறோம். .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் 375 பொருட்களின் விலை மேலும் குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்
20 Sep 2025கோவில்பட்டி, ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டி.
-
சாலை விபத்தில் ஆசிரியை பலி: குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
20 Sep 2025விழுப்புரம், விழுப்புரத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் : மத்திய அரசு கருத்து
21 Sep 2025புதுடெல்லி : எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
-
தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு: வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மோகன்லால்
21 Sep 2025திருவனந்தபுரம் : தனக்கு தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்த நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்