எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பமாகோ, ஆக.18 - மாலி நாட்டில் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வந்த ஐநா ஊழியர்கள் 2 பேர் தற்கொலை படை தாக்குதலில் பலியானார்கள். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்கொய்தா தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த 2012-ஆம் ஆண்டு வடக்கு மாலி பகுதியை தீவிரவாதிகள் கைப்பற்றினர். பின்னர், பிரான்ஸ் உதவியுடன் மாலி ராணுவத்தினர் தீவிரவாதிகளுடன் போரிட்டு அந்த பகுதிகளை மீட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2013-ஆம் ஆண்டு அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இந்நிலையில், வடக்கு மாலியில் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்கள் நடத்துகின்றனர். தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் ஐநா சமாதான குழு ஈடுபட்டு வருகிறது.
கடந்த வாரம் இங்கு நடந்த சுரங்க விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ நா சமாதான குழுவினர் உதவினர். இப்பகுதிகளில் ஐநா சமாதான குழுவினரின் நிவாரண பணிகளுக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஐநா குழுவினர் உடனே வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐநா குழுவினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதலில் ஐநா ஊழியர்கள் 2 பேர் பலியானார்கல். மேலும் 7 பேர் காயமடைந்தனர். வடக்கு மாலியில் நிவாரணப் பணிகலை மேற்கொண்டு வரும் ஐநா குழுவினர் மீது நடைபெற்ற தாக்குதல் மிகவும் கண்டிக்கத் தக்கது என்று ஐ நா பொதுச் செயலாளரின் சிறப்பு தூதர் டேவிட் கிரஸ்லி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


